மேலும் அறிய

Crime : பணிபுரியவந்த 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை.. புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி

புதுச்சேரி: 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. புதுச்சேரி மாநிலம் மங்கலம் அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 60). இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்து பண்ணை நடத்தி வந்தார். இந்த வாத்து பண்ணையில் அவரது மனைவி சுபா (45). மகன்கள் ராஜ்குமார் (27) சரத்குமார் (25). கன்னியப்பனின் மாமனார் காத்தவராயன் (70) மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாம்பலப்பட்டு பகுதியை சேர்ந்த பசுபதி (21) பெரிய முதலியார்சாவடி சிவா (21) வானூர் மூர்த்தி (21) கண்டமங்கலம் ஆறுமுகம் (58), வில்லியனூர் வேலு (24) ஆகியோர் வேலை செய்து வந்தனர். வாத்துகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று பராமரிக்கும் வேலைக்கு சில சிறுமிகளையும் வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அவர்கள் வாத்து பண்ணையிலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் பண்ணையில் வேலை செய்த 5 சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

கடந்த 22.12.2022 அன்று புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், பசுபதி, சிவா, மூர்த்தி ஆகிய 6 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காத்தவராயன், சுபா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வேலு என்பவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே அதே வாத்து பண்ணையில் வேலை செய்த 3 சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நலக்குழுவினர் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது அது உறுதியானது. பின்னர் 3 சிறுவர்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து மங்கலம் போலீசார் 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாக வழக்குப்பதிவு செய்தனர். அதாவது வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், வேலு, மூர்த்தி, பசுபதி ஆகிய 6 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  இந்த வழக்கில் பசுபதி மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும். இந்த வழக்கில் தொடர்புடைய கன்னியப்பன் உள்பட 5 பேர் மீதும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார். சிறுவர்களிடம் ஹோமோசெக்ஸில் ஈடுபட்ட வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பசுபதி, ஏற்கனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget