மேலும் அறிய

Crime: போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாத மகன் - தாயை எரித்து கொன்ற கொடூரம்

புதுச்சேரியில் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாததை கண்டித்த தாய் தந்தையை எரித்த மகன்.

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (57). இவரது மனைவி லலிதா (எ) லதா (52). இவர்கள் திருக்காஞ்சி பகுதியில் வீடு கட்டிக்கொண்டு அங்கேயே வசித்து வந்தனர். தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த தட்சணாமூர்த்திக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அவரது மனைவி லலிதா அருகில் உள்ள பொம்மை தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஜெயக்குமார் (35, புகழ்மணி (32) என இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இதில் ஜெயக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிகிறார். புகழ்மணி தனியார் கம்பெனியில் டிரைவராக உள்ளார். இதனிடையே புகழ்மணி குடிக்கு அடிமையாகி உள்ளார். மது மட்டுமின்றி கஞ்சா, போதை ஊசி போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாகி, அதில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்திலையில் நேற்று இரவு ஜெயக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். சுமார் 9 மணியளவில் புகழ்மணி வீட்டுக்கு வந்து தனது தாயார் லவிதாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த புகழ்மணி லலிதாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத புகழ்மணி, தலையணையில் பாமாயிலை ஊற்றி தீ வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார். இதில் தீப்பிடித்து வனிதா எரிய தொடங்கினார். அருகில் இருந்த அவரது கணவர் தட்சணாமூர்த்தி தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதில் அவரது உடலிலும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளியே வந்து கதறி அழுதார். இதனிடையே அருகில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்ற புகழ்மணி, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்களுடைய குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தனர். தகவல் அறிந்த எஸ்பி ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப் - இன்ஸ்பெக்டர்கள் வேலு), சண்முகசத்யா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது லலிதா எரிந்து கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தட்சிணாமூர்த்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். லவிதாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கதிர்காமம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தட்சனாமூர்த்தியை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் புகழ்மணியை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget