மேலும் அறிய

கள்ளக்காதல் கொடூரம்! சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் படுகொலை; அதிர்ச்சி தரும் காரணம்

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் புதுச்சேரி ஒப்பந்ததாரர் குத்திக்கொலை, கள்ளக்காதலியின் கணவன், தோழி உட்பட 3 பேர் கைது.

சென்னை: சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் புதுச்சேரி ஒப்பந்ததாரர் குத்திக்கொலை, கள்ளக்காதலியின் கணவன், தோழி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரம் புதுச்சேரி ஒப்பந்ததாரர் கொலை 

சென்னையின் பரபரப்பான அசோக் நகர் பகுதியில், கள்ளக்காதலியுடன் சொகுசு காரில் இருந்த புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர், பட்டப்பகலில் ஒரு கும்பலால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, கள்ளக்காதலியின் கணவர், அவரது மனைவி (கள்ளக்காதலி) மற்றும் அவருக்கு உதவிய தோழி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த கொடூரம்

சென்னை அசோக் நகர் 4வது பிரதான சாலையில் நேற்று மதியம், ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது. அதில், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பிரகாஷ் (38) மற்றும் அவரது பள்ளி தோழியான சுகன்யா (37) ஆகியோர் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த காரை மறித்தது. கணம் தாமதிக்காமல், அக்கும்பல் காரில் இருந்த பிரகாஷை ஆத்திரத்துடன் வெளியே இழுத்துப் போட்டது. அவர் சுதாரிப்பதற்குள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷின் மார்புப் பகுதியில் சரமாரியாகக் குத்திச் சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரகாஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளிகள்

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த அசோக் நகர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கொலை நடந்த 4வது பிரதான சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்தப் பதிவுகளின் அடிப்படையில், கொலையாளிகள் மற்றும் அவர்களுடன் வந்த இரு பெண்கள் குறித்து முக்கியத் துப்பு கிடைத்தது.

இதனையடுத்து, போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், வந்தவாசி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கடலூர் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுபவருமான தனஞ்செழியன் (42), அவரது மனைவி சுகன்யா (37) மற்றும் சுகன்யாவின் தோழி குணசுந்தரி (27) என்பது தெரியவந்தது.

கள்ளக்காதலால் வந்த பயங்கரம்

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது அம்பலமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையான பிரகாஷூம், கைது செய்யப்பட்ட சுகன்யாவும் பள்ளியில் படிக்கும்போதே நண்பர்களாகப் பழகி, பின்னர் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு சுகன்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை மீறி காதல் தொடர்ந்ததால், பெற்றோர் கட்டாயப்படுத்தி சுகன்யாவை, தனஞ்செழியனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்திற்குப் பின், தனஞ்செழியன் - சுகன்யா தம்பதியினர் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்துள்ளனர். இருப்பினும், சுகன்யாவால் தனது முதல் காதலனான பிரகாஷை மறக்க முடியவில்லை. அவர் பிரகாஷூடன் இருந்த தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டு, கணவனுக்குத் தெரியாமல் பழகி வந்துள்ளார். நாளடைவில், இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் தனஞ்செழியனுக்குத் தெரியவந்தது. அவர், மனைவி சுகன்யாவையும், பிரகாஷையும் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த மன உளைச்சலால், தனஞ்செழியன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தியடைந்த சுகன்யா, அவரிடம் இருந்து கோபித்துக் கொண்டு பிரிந்து, புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

கொலையில் முடிந்த சென்னை பயணம்

கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் இருந்த சுகன்யாவுக்கு, பிரகாஷை சந்திக்க எந்தத் தடையும் இருக்கவில்லை. இதனால், இருவரும் அடிக்கடி சந்தித்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், அரசு டெண்டர் தொடர்பான வேலை காரணமாக பிரகாஷ் நேற்று சென்னைக்கு வந்துள்ளார். அவருடன் சுகன்யாவும் வந்துள்ளார். இருவரும் அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி, உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்தத் தகவல், சுகன்யாவின் தோழியான குணசுந்தரிக்குத் தெரியவந்துள்ளது. குணசுந்தரி, உடனடியாக இந்த விவரத்தை சுகன்யாவின் கணவர் தனஞ்செழியனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சென்னையில் இருப்பதை அறிந்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தனஞ்செழியன், பழிவாங்கத் திட்டமிட்டார். அவர் உடனடியாக தனது நண்பர்கள் 3 பேரைத் திரட்டிக்கொண்டு, குணசுந்தரியையும் அழைத்துக்கொண்டு அசோக் நகருக்கு விரைந்துள்ளார்.

அங்கு, 4வது பிரதான சாலையில் பிரகாஷூம், சுகன்யாவும் காரில் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். கொதித்துப் போன தனஞ்செழியன் மற்றும் அவரது நண்பர்கள், பிரகாஷை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தனர். கொலையைச் செய்தபின், தனஞ்செழியன் தனது மனைவி சுகன்யாவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.

 3 பேர் தலைமறைவு

இந்தச் சம்பவம் தொடர்பாக, தனஞ்செழியன், அவரது மனைவி சுகன்யா மற்றும் தகவலாளி போல் செயல்பட்ட குணசுந்தரி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த தனஞ்செழியனின் நண்பர்கள் 3 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த இந்த படுகொலைச் சம்பவம், சென்னை அசோக் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Embed widget