மேலும் அறிய

Crime : வாழை இலையில் மடித்து மூட்டை கட்டி கல்குவாரியில் வீசப்பட்ட பெண் சடலம்; என்ன நடந்தது ?

கொலை செய்ததை மறைப்பதற்காக இளவரசியை வாழை இலையில் வைத்து மடித்து மூட்டை கட்டி திருவக்கரை கல்குவாரி பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளான்

புதுச்சேரி வடுவ குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி வயது 38. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ராஜீவுக்கும் இளவரசிக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றிய நிலையில் இளவரசியை ராஜு அடித்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்ததை மறைப்பதற்காக இளவரசியை வாழை இலையில் வைத்து மடித்து மூட்டை கட்டி தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இருக்கக்கூடிய திருவக்கரை கல்குவாரி பகுதியில் உள்ள பள்ளத்தில் இளவரசியை வீசிவிட்டு சென்றுள்ளார். 

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக இளவரசி காணவில்லை என இளவரசி உறவினர்கள் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசியை தேடி வந்தனர். இந்நிலையில் இளவரசியை அடித்துக் கொலை செய்த ராஜு போலீசாருக்கு பயந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்பொழுது அவர் போலீசாரிடம் கூறுகையில்... எனக்கும் இளவரசிக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்து அடித்து கொலை செய்து விட்டேன். அதனை மறைப்பதற்காக வாழை இலையில் வைத்து மடித்து மூட்டை கட்டி திருவக்கரை பகுதியில் கல்குவாரியில் வீசிவிட்டு சென்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

கல்குவாரி தண்ணீரில் மூட்டையாக கிடந்த சடலம்

இதனை அடுத்து புதுச்சேரி போலீசார் விழுப்புரம் மாவட்டம் வானூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் திருவக்கரை பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது குற்றவாளியான ராஜூ இளவரசியை அடித்து கொலை செய்து கல்குவாரி பள்ளத்தில் வீசிய இடத்தை காண்பித்தார். அப்போது கல்குவாரி தண்ணீரில் மூட்டை  ஒரு ஓரமாக கிடந்தது. அந்த மூட்டையில் இளவரசி சடலமாக மீட்கப்பட்டார்.

 இதனை தொடர்ந்து போலீசார் இளவரசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்காக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மரக்காணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி (25) என்ற பெண் சுற்றி திரிவார். இவர் அப்பகுதியில் வருவர்களிடம்  தகாத வார்த்தைகள் பயன்படுத்தி சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி மரக்காணம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு டீக்கடை அருகில் இருந்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த கத்திக்குத்து பாலா (45) என்ற போதை ஆசாமி சென்றுள்ளார்.

இவரைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தகாத வார்த்தைகளில் திட்டி சண்டை போட்டதாக கூறப்படுகிறது . இதனால் ஆத்திரமடைந்த கத்திக்குத்து பாலா அருகில் கிடந்த கல்லை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி தலையில் தாக்கி உள்ளார். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget