மேலும் அறிய

அவருக்கு தனி ரூட்! கைதியை பின்பக்கமாக அனுப்பி வைத்த அதிகாரிகள்! வாசலில் காத்துக்கிடந்த தனிப்படை!

கைதியுடன் சிறை அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை கண்டு தனிப்படை காவல்துறையினர் கடும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜாமீனில் வெளியே செல்லும் கைதிகளின் பின்புலம் குறித்து உளவுப் பிரிவினர் ரகசியமாக கண்காணிப்பார்கள். கைதி ரவுடியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியே செல்லும்போது அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் வாரன்ட் இருந்தால் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கைது செய்வார்கள். அதே போல தொடர்ந்து திருட்டு வழக்கில் ஈடுபடும் நபர்களையும் இவ்வாறு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். இவ்வாறு வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிவகாஞ்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது வாரன்ட் இருப்பதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்ய 3 நாட்களுக்கு முன்பே சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். 

அவருக்கு தனி ரூட்! கைதியை பின்பக்கமாக அனுப்பி வைத்த அதிகாரிகள்! வாசலில் காத்துக்கிடந்த தனிப்படை!

வழக்கமாக சிறையின் நுழைவாயில் அருகில் உள்ள மரத்தடியில் நிற்பார்கள், உள்ளே இருந்து வெளியே வரும்போது அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி சிவகங்கை தனிப்படையினர் ரவுடிக்காக காத்திருந்தனர். அப்போது சிறை அதிகாரி ஒருவர், அங்கிருந்த தனிப்படையினரிடம், இங்கு வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது, ரோட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று கூறி அனுப்பினார்.

இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ரோட்டுக்கு வெளியே காத்திருந்தனர். காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை காத்திருந்தும் ஒரே ஒரு முதியவர் மட்டுமே சிறையிலிருந்து வெளியே வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனிப்படையினர் தேடி வந்த ரவுடி 11.30 மணிக்கே சென்றுவிட்டாரே என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரே பாதைதான் இருக்கிறது. இந்தவழியாக செல்லவில்லையே என கேட்டுள்ளனர்.

தொடர் விசாரணையில் சிறை அதிகாரிகள் ரவுடியை வேறு வழியாக தப்பிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக மெயின் கேட் வழியாக கைதிகள் வெளியே வருவார்கள். ஆனால் இந்த ரவுடிக்கு மட்டும் சிறை காம்பவுண்ட்சுவரில் இருக்கும் கேன்டீன் ஷட்டரை திறந்து வெளியே அனுப்பியது தெரியவந்துள்ளது. கைதியுடன் சிறை அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை கண்டு தனிப்படை காவல்துறையினர் கடும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து உளவுப் பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடியை ரகசியமாக வெளியே அனுப்பியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சேலம் மத்திய சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி ஆகியோரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
ABP Premium

வீடியோ

அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்
4000 குழந்தைகள்... ARUN ICECREAM கின்னஸ் சாதனை சென்னையை மிரளவைத்த சம்பவம்
கோவையில் கொலைவெறி தாக்குதல்!போதை கும்பலிடம் சிக்கிய இளைஞர்பகீர் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Ration Card: சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
Embed widget