மேலும் அறிய

அவருக்கு தனி ரூட்! கைதியை பின்பக்கமாக அனுப்பி வைத்த அதிகாரிகள்! வாசலில் காத்துக்கிடந்த தனிப்படை!

கைதியுடன் சிறை அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை கண்டு தனிப்படை காவல்துறையினர் கடும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜாமீனில் வெளியே செல்லும் கைதிகளின் பின்புலம் குறித்து உளவுப் பிரிவினர் ரகசியமாக கண்காணிப்பார்கள். கைதி ரவுடியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியே செல்லும்போது அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் வாரன்ட் இருந்தால் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கைது செய்வார்கள். அதே போல தொடர்ந்து திருட்டு வழக்கில் ஈடுபடும் நபர்களையும் இவ்வாறு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். இவ்வாறு வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிவகாஞ்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது வாரன்ட் இருப்பதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்ய 3 நாட்களுக்கு முன்பே சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். 

அவருக்கு தனி ரூட்! கைதியை பின்பக்கமாக அனுப்பி வைத்த அதிகாரிகள்! வாசலில் காத்துக்கிடந்த தனிப்படை!

வழக்கமாக சிறையின் நுழைவாயில் அருகில் உள்ள மரத்தடியில் நிற்பார்கள், உள்ளே இருந்து வெளியே வரும்போது அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி சிவகங்கை தனிப்படையினர் ரவுடிக்காக காத்திருந்தனர். அப்போது சிறை அதிகாரி ஒருவர், அங்கிருந்த தனிப்படையினரிடம், இங்கு வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது, ரோட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று கூறி அனுப்பினார்.

இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ரோட்டுக்கு வெளியே காத்திருந்தனர். காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை காத்திருந்தும் ஒரே ஒரு முதியவர் மட்டுமே சிறையிலிருந்து வெளியே வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனிப்படையினர் தேடி வந்த ரவுடி 11.30 மணிக்கே சென்றுவிட்டாரே என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரே பாதைதான் இருக்கிறது. இந்தவழியாக செல்லவில்லையே என கேட்டுள்ளனர்.

தொடர் விசாரணையில் சிறை அதிகாரிகள் ரவுடியை வேறு வழியாக தப்பிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக மெயின் கேட் வழியாக கைதிகள் வெளியே வருவார்கள். ஆனால் இந்த ரவுடிக்கு மட்டும் சிறை காம்பவுண்ட்சுவரில் இருக்கும் கேன்டீன் ஷட்டரை திறந்து வெளியே அனுப்பியது தெரியவந்துள்ளது. கைதியுடன் சிறை அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை கண்டு தனிப்படை காவல்துறையினர் கடும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து உளவுப் பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடியை ரகசியமாக வெளியே அனுப்பியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சேலம் மத்திய சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி ஆகியோரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

சாதி மட்டுமல்ல காதலுக்கு குறுக்கே வந்த மாமியார்.. கழுத்தை அறுத்துக் கொன்ற பெண்ணின் அம்மா!
சாதி மட்டுமல்ல காதலுக்கு குறுக்கே வந்த மாமியார்.. கழுத்தை அறுத்துக் கொன்ற பெண்ணின் அம்மா!
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை... தட்டிக்கேட்ட தாயை வெட்டிக் கொன்ற கணவன்
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை... தட்டிக்கேட்ட தாயை வெட்டிக் கொன்ற கணவன்
"கல்யாணம் பண்ண முடியாது , சாதி வேற" – 3 ஆண்டு காதலைக் கைவிட்ட காதலன் !! மாணவி புகார்
வழக்கறிஞரின் துரோகம்: விவாகரத்து வழக்கிற்காக வந்தவரின் மனைவியுடன் கள்ளக்காதல்..
வழக்கறிஞரின் துரோகம்: விவாகரத்து வழக்கிற்காக வந்தவரின் மனைவியுடன் கள்ளக்காதல்..

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Solomon Pappaiah: தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்- பட்டிமன்ற உலகின் ஜாம்பவான்!
Solomon Pappaiah: தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்- பட்டிமன்ற உலகின் ஜாம்பவான்!
2 தொகுதியையும் தட்டி தூக்கணும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
2 தொகுதியையும் தட்டி தூக்கணும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
கடனில் தவிக்கும் போது ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா.? சிஎம் விஜய்யை விளாசிய இபிஎஸ்
கடனில் தவிக்கும் போது ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா.? சிஎம் விஜய்யை விளாசிய இபிஎஸ்
ரூ.8,000 இஎம்ஐ-ல் புதிய கார்: உங்கள் பட்ஜெட்டில் வாங்க சிறந்த 3 மாடல்கள்- இதோ லிஸ்ட்!
ரூ.8,000 இஎம்ஐ-ல் புதிய கார்: உங்கள் பட்ஜெட்டில் வாங்க சிறந்த 3 மாடல்கள்- இதோ லிஸ்ட்!
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
”மனச்சாட்சியற்ற சந்தர்ப்பவாத கல்லாப்பெட்டி கூட்டணி”.! TVK கூட்டணியை போட்டுத்தாக்கும் முரசொலி
Maruti Baleno: மாருதி பலேனோ..! சென்னையில் 5 வேரியண்ட்களின் ஆன் - ரோட் விலை, EMI விவரங்கள்
மாருதி பலேனோ..! சென்னையில் 5 வேரியண்ட்களின் ஆன் - ரோட் விலை, EMI விவரங்கள்
CTR Vs Udhay:நிர்மல்குமார் என்ட்ரி..! தவெகவினர் கோஷத்தால் அதிர்ந்த மதுரை ஏர்போர்ட் -சைலண்ட் மோடில் உதயநிதி
நிர்மல்குமார் என்ட்ரி..! தவெகவினர் கோஷத்தால் அதிர்ந்த மதுரை ஏர்போர்ட் -சைலண்ட் மோடில் உதயநிதி
India Nukes: அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
அணு ஆயுதங்களை அதிகரித்த இந்தியா - மொத்தம் 190 ஆ? வேகமெடுக்கும் யுரேனியம் உற்பத்தி திறன் - முழு விவரம்
Embed widget