மேலும் அறிய

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற கொள்ளையர்களை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த காவலருக்கு, காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் உபகோட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கடலி என்ற கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்ற மூதாட்டி கடலி மெயின் ரோட்டில் இன்று காலை தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு மர்மநபர்கள் மங்களம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதில், மூதாட்டி மங்களம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, குத்தாலம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் சுரேஷ், நல்லாடை செக்போஸ்டில் டுயூட்டி மாற்றுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 


மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

சம்பவத்தை நேரில் பார்த்த காவலர் சுரேஷ் சற்றும் தாமதிக்காமல், மூதாட்டியிடம் விளக்கமும் கேட்காமல் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வழிப்பறிக் கொள்ளையர்களின் வாகனத்தை தனது வாகனத்தால் மோதியுள்ளார். ஆனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் வேகமாக வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். உடனடியாக தனது வாகனத்தை திருப்பி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று, செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் என்ற இடத்தில் கொள்ளையர்களின் வாகனத்தை மறித்தார் காவலர் சுரேஷ். இதையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் வயலில் இறங்கி தப்பியோடினர். அங்கும் அவர்களை விரட்டிச் சென்ற காவலர் சுரேஷ் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று கொள்ளையர்களில் ஒருவனை மடக்கி பிடித்தார். 


மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

அப்போது அவ்வழியே சென்ற தலைமை காவலர் அன்பழகன் கொள்ளையனை தப்பியோடாமல் முதல்நிலை காவலர் சுரேஷக்கு உதவினார். மற்றொரு கொள்ளையன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடினான். இதையடுத்து, காவலர் சுரேஷ் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் செம்பனார்கோயில் காவல் உதவி ஆய்வாளர் மங்களநாதன், தனிப்படை காவல் ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் விரைந்து சென்று பிடிபட்ட கொள்ளையனை செம்பனார்கோயில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.


மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

சம்பவம் நடைபெற்ற இடம் பெரம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சுகந்தி, கொள்ளையனை பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, பெரம்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவன் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலைச் சேர்ந்த குணசேகரன் மகன் முத்து என்கிற முத்தழகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நகையுடன் தப்பியோடிய மயிலாடுதுறையைச் சேர்ந்த மற்றொரு வழிப்பறி கொள்ளையன் ராஜா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கண்ணெதிரே நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளை நடைபெற்ற ஐந்தே நிமிடத்தில் தனி ஆளாக துணிந்து விரட்டி சென்று கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர் சுரேஷை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கணவரின் நண்பருடன் காதல் உறவு.. தலை துண்டித்து பெண் கொலை!
கணவரின் நண்பருடன் காதல் உறவு.. தலை துண்டித்து பெண் கொலை!
கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
TASMAC Liquor Bottles : டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
Embed widget