மேலும் அறிய

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற கொள்ளையர்களை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த காவலருக்கு, காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் உபகோட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கடலி என்ற கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்ற மூதாட்டி கடலி மெயின் ரோட்டில் இன்று காலை தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு மர்மநபர்கள் மங்களம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதில், மூதாட்டி மங்களம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, குத்தாலம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் சுரேஷ், நல்லாடை செக்போஸ்டில் டுயூட்டி மாற்றுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 


மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

சம்பவத்தை நேரில் பார்த்த காவலர் சுரேஷ் சற்றும் தாமதிக்காமல், மூதாட்டியிடம் விளக்கமும் கேட்காமல் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வழிப்பறிக் கொள்ளையர்களின் வாகனத்தை தனது வாகனத்தால் மோதியுள்ளார். ஆனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் வேகமாக வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். உடனடியாக தனது வாகனத்தை திருப்பி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று, செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் என்ற இடத்தில் கொள்ளையர்களின் வாகனத்தை மறித்தார் காவலர் சுரேஷ். இதையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் வயலில் இறங்கி தப்பியோடினர். அங்கும் அவர்களை விரட்டிச் சென்ற காவலர் சுரேஷ் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று கொள்ளையர்களில் ஒருவனை மடக்கி பிடித்தார். 


மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

அப்போது அவ்வழியே சென்ற தலைமை காவலர் அன்பழகன் கொள்ளையனை தப்பியோடாமல் முதல்நிலை காவலர் சுரேஷக்கு உதவினார். மற்றொரு கொள்ளையன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடினான். இதையடுத்து, காவலர் சுரேஷ் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் செம்பனார்கோயில் காவல் உதவி ஆய்வாளர் மங்களநாதன், தனிப்படை காவல் ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் விரைந்து சென்று பிடிபட்ட கொள்ளையனை செம்பனார்கோயில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.


மயிலாடுதுறை: மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : டூவீலர் சேஸிங்கில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர்..!

சம்பவம் நடைபெற்ற இடம் பெரம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சுகந்தி, கொள்ளையனை பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, பெரம்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவன் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலைச் சேர்ந்த குணசேகரன் மகன் முத்து என்கிற முத்தழகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நகையுடன் தப்பியோடிய மயிலாடுதுறையைச் சேர்ந்த மற்றொரு வழிப்பறி கொள்ளையன் ராஜா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கண்ணெதிரே நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளை நடைபெற்ற ஐந்தே நிமிடத்தில் தனி ஆளாக துணிந்து விரட்டி சென்று கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர் சுரேஷை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
Puducherry Election 2026: விதியை மீறினாரா அமைச்சர்? காரைக்கால் வடக்கு தொகுதியில் கட்சி அடையாளத்துடன் வாக்களித்த திருமுருகன்...!
விதியை மீறினாரா அமைச்சர்? காரைக்கால் வடக்கு தொகுதியில் கட்சி அடையாளத்துடன் வாக்களித்த திருமுருகன்...!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83%% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03%% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38%% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
EPS election campaign : அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
Embed widget