மேலும் அறிய

ChandraBabu Naidu: சந்திரபாபு நாயுடு கைது .. தடுத்து நிறுத்தப்பட்ட மகன் லோகேஷ்.. தெலுங்கு தேசம் தொண்டர்கள் கொந்தளிப்பு..

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காண மகன் நாரா லோகேஷ் செல்ல முயன்ற நிலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காண மகன் நாரா லோகேஷ் செல்ல முயன்ற நிலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சந்திரப்பாபு நாயுடு மீது ஊழல் வழக்கு 

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 2 முறை ஆந்திராவில் முதலமைச்சராக பதவி வகித்துள்ள அவர் மீது, அவருடைய ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சராக இருந்தபோது ஐடி நிறுவனங்கள் புதிதாக அமைக்க ரூ.118 கோடி சட்டவிரோதமாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நந்தியாலா பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபுநாயுடு அங்கு தனது வாகனத்தில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

கைது செய்த போலீசார் - தொண்டர்கள் எதிர்ப்பு 

அப்போது இன்று (செப்டம்பர் 9) அதிகாலை 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய சென்றனர். ஆனால் எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் அவர் இருப்பதால் காலை 6 மணி வரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 3 மணி நேர காத்திருத்தலுக்குப் பின் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர். அவரது கைதுக்கு தெலுங்கு தேசம் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சந்திரபாபு நாயுடுவை பின்னர் போலீசார் விஜயவாடா அழைத்து சென்றனர்.

இதனிடையே ஆந்திரா மாநிலத்தில் கடந்த 6 மாதமாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ் தனது தந்தை கைது செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக கோதாவரி மாவட்டத்தில் இருந்து விஜயவாடா செல்ல முடிவு செய்தார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லோகேஷூம், தெலுங்கு தேசம் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மேலும் படிக்க: ChandraBabu Naidu: முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி கைது.. பெரும் பதற்றத்தில் ஆந்திரா..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
Embed widget