மேலும் அறிய

‛கடலா... ஆகாயமா... சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காது’ பறக்கிறாரா மிதக்குறாரா ராஜேந்திர பாலாஜி?

இப்படி தான் நித்தியானந்தாவை போலீசார் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர் ஒரு நாட்டின் அதிபராகவே தன்னை அறிவித்துக் கொண்டார். செயல்பட்டும் வருகிறார். 

ஒவ்வொரு நாளும் தனிப்படையின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய, அடுத்தடுத்த போலீசார் எடுத்து வரும் வியூகம், இதுவரை கையில் பலன் தரவில்லை. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக, விருதுநகர் குற்றப்பிரிவுக்கு வந்த புகாரின் தொடர்ச்சியாக, ராஜேந்திரபாலாஜியை தேடும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. 


‛கடலா... ஆகாயமா... சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காது’ பறக்கிறாரா மிதக்குறாரா ராஜேந்திர பாலாஜி?

அவரது முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற முயற்சித்து வருகிறார் ராஜேந்திரபாலாஜி. ஆனால் அவர் எங்கு இருக்கிறார், என்பதற்காக விடை இதுவரை தெரியவில்லை. ராஜேந்திரபாலாஜியை கடல் பகுதியில் தேடுவதாக கூறினார்கள். பின்னர் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான ஊர்களில் இருப்பதாக கூறினார்கள். அதன் பின், பெங்களூருவில் இருப்பதாக கூறினார்கள்.

கார் விட்டு கார், ஊர் விட்டு ஊர் என ராஜேந்திரபாலாஜி அடுத்தடுத்து இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார் என்று கூறினார்கள். இதுவரை எந்த ஊரில் இருக்கிறார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ராஜேந்திரபாலாஜியை தேடி இதுவரை 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து தனிப்படைக்கும் தண்ணி காட்டி, எஸ்கேப் ஆகி வருகிறார் அவர். 

இந்நிலையில் தான் அவர் இங்கு தான் உள்ளாரா... இல்லை வேறு ஏதாவது நாட்டிற்கு சென்று விட்டாரா என்கிற அளவிற்கு போலீசாரின் தேடுதல் வேட்டையில் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி தான் நித்தியானந்தாவை போலீசார் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர் ஒரு நாட்டின் அதிபராகவே தன்னை அறிவித்துக் கொண்டார். செயல்பட்டும் வருகிறார். 

அந்த வரிசையில் ராஜேந்திரபாலாஜியும் தற்போது மறைமுகமாகிவிட்டாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. எந்நிலையிலும் கைதாகிவிடக்கூடாது என்பதில் ராஜேந்திரபாலாஜி உறுதியாக உள்ளார். முன்ஜாமின் பெற்று, வழக்கம் போல ஊரில் கெத்தாக வலம் வர வேண்டும். வழக்கை சட்டப்படி சந்திக்க வேண்டும் என்பதில் தான் அவர் குறியாக உள்ளார் என தெரிகிறது. அது அவரது குறிக்கோள் என்றால், போலீசாருக்கு அவரை பிடிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும், ஒருநாளாவது சிறையில் வைக்க வேண்டும் என்கிற வெறியோடு தேடிவருகின்றனர். 


‛கடலா... ஆகாயமா... சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காது’ பறக்கிறாரா மிதக்குறாரா ராஜேந்திர பாலாஜி?

ஆனால் அதற்கு இதுவரை கைமேல் பலன் கிடைக்கவில்லை. போலீசார் இன்னும் தேடாத ஒரே இடம், ஆகாய மார்க்கம் தான். இன்னும் சில தனிப்படைகள் அமைத்து, அங்கும் தேட வாய்ப்புண்டு என கிண்டல் அடிக்கின்றனர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள். ‛சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காதுப்பு...’ என்று மார் தட்டிக் கொள்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget