மேலும் அறிய

பெரம்பலூரில் துபாயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.6¼ லட்சம் மோசடி - வடமாநிலத்தவர் 2 பேர் கைது

துபாயில் வேலை வாங்கித்தருவதாக பெரம்பலூா் பட்டதாரியிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த வடமாநிலத்தை சோந்த 2 வாலிபர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 43). பி.காம் படித்துள்ள இவர் ஏற்கனவே துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் அந்த வேலை பிடிக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கார் ஓட்டி வருகிறார். மேலும் அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வேண்டி இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளார். அப்போது துபாயில் வேலை வாங்கித்தருவதாக சிலர் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம் ரஞ்சித்குமாரிடம் வங்கி கணக்குகளை கொடுத்து ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 952 பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் ரஞ்சித்குமாருக்கு துபாயில் வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரஞ்சித்குமார் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அவரது குழுவினர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 


பெரம்பலூரில் துபாயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.6¼ லட்சம் மோசடி - வடமாநிலத்தவர் 2 பேர் கைது
 
இதனை தொடர்ந்து விசாரணையில், குற்றவாளிகள் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை தேடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீசார் சதீஷ்குமார், திலிப்குமார், வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கடந்த 23-ந்தேதி டெல்லி புறப்பட்டனர். இந்தநிலையில், குற்றவாளிகள் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் அறிந்த சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கடந்த 29-ந்தேதி அங்கு விரைந்தனர். அப்போது கோடா என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த பைய்க்குந்த மிஷ்ராவின் மகன் விகாஸ் குமார் மிஷ்ரா (32), காமோத் ஜாவின் மகன் கவுதம் குமார் ஜா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் விகாஸ் குமார் மிஷ்ரா சி.ஏ. பட்டதாரி ஆவார்.
 

பெரம்பலூரில் துபாயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.6¼ லட்சம் மோசடி - வடமாநிலத்தவர் 2 பேர் கைது
 
மேலும் இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் கணினியின் சி.பி.யு. ஒன்று, 5 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 14 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் 5 வங்கி காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசாா் கடந்த 30-ந்தேதி காசியாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் விகாஸ் குமார் மிஷ்ரா, கவுதம் குமார் ஜா ஆகியோரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதில் கவுதம் குமார் ஜா, விகாஸ் குமார் மிஷ்ராவின் மனைவியின் தம்பி ஆவார். மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகளை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget