மேலும் அறிய

எமர்ஜென்சி கதவை ஓபன் செய்யமுயன்ற பயணி.. போலீசில் ஒப்படைப்பு.. நடந்தது என்ன ?

இதனால் விமானம், ஒரு மணிநேரம் தாமதமாக, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

டெல்லி விமானத்தின் அவசர கால கதவை, பயணி ஒருவர் திறக்க முயன்றதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.  விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட பயணி, போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதனால் விமானம், ஒரு மணிநேரம் தாமதமாக, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

இதை அடுத்து விமானி, விமானத்தை ஓடு பாதையில், இயக்குவதற்கு தயாரானார். அந்த நேரத்தில் திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறந்தால்,ஒலிக்கக்கூடிய அலாரம், விமானத்துக்குள் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு, அவசரகால கதவை திறந்தது யார்? என்று விசாரிக்க தொடங்கினர். இதை அடுத்து பரபரப்படைந்த விமான பணிப்பெண்கள், அவசர கால கதவு அருகே உள்ள, இருக்கையில் அமர்ந்திருந்த, பயணியிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்தப் பயணி, நான் கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி  விட்டேன். உடனே விமானத்துக்குள், அந்த அலாரம் ஒலித்து விட்டது. மேலும் நான் முதல்முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.

ஆனாலும் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள், அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பயணியை உடனடியாக விமானத்திலிருந்து கீழே இறக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை விமான நிலைய மேலாளருக்கு, தலைமை விமானி  அவசர தகவல் கொடுத்தார். இதை அடுத்து  விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான நிலைய பாதுகாப்பு  அதிகாரிகள், விரைந்து வந்து, அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தினர். அதோடு அந்த பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். மேலும் அவருடைய விமான பயணமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்பு பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும், தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார்  ஒரு மணிநேரம் தாமதமாக, இரவு   8 மணிக்கு, 158 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

அதன்பின்பு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணியை, சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார் பயணியை விசாரித்தபோது, அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருடைய பெயர் சரோஸ் (27). சென்னையில் ஒரு வேலையில் சேர்வதற்காக, இண்டர்வியூக்கு, உத்தரபிரதேசத்தில் இருந்து, வரும்போது ரயிலில் வந்துள்ளார். இப்போது அவர் விமானத்தில் டெல்லிக்கு திரும்பி செல்கிறார் என்று தெரியவந்தது. மேலும் இந்தப் பயணிக்கு இது முதல் விமான பயணம் என்பதும் தெரிந்தது. இதை அடுத்து அந்தப் பயணி சென்னை விமான நிலைய போலீசாரிடம், தான் தெரியாமல் செய்து விட்டேன் என்று கூறினார். இந்த நிலையில் விமானநிலைய போலீசார், விமான நிறுவனம்  அளித்துள்ள புகாரின்பேரில், சி எஸ் ஆர் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget