மேலும் அறிய

ப்ளாஸ்டிக் பையால் சுற்றிக்கொண்ட கொடுமை.. கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை : மீட்கப்பட்ட கடிதம்..!

ஓசூரில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் மனைவி, மகள், தாய்க்கு விஷம் கலந்துகொடுத்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி சொர்ணபூமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்  மோகன் வயது ( 41). இவருடைய , மனைவி ரம்யா வயது (33) , இவர்களுக்கு திருமணமாகி அன்மயா வயது (10) என்ற மகளும் உள்ளார்  , 61 வயதான தாய் வசந்தம்மாள் ஆகியோருடன் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர்கள் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அதனால், மோகன் வீட்டைக் காலி செய்வதற்கு, வெள்ளிக்கிழமை கடைசி நாளாக கெடு கொடுக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை வரை மோகன் வீட்டைக் காலி செய்யாத நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் பலமணி நேரமாக வீடு திறக்கப்படவில்லை. அதனால், வீட்டை வாங்கிய புதிய உரிமையாளர் வந்து வீட்டின்  உள்ளே பார்த்தபோது வீட்டினுள் மின்விசிறி, டிவி ஆகியவை இயங்கிக் கொண்டிருந்தன. 

ப்ளாஸ்டிக் பையால் சுற்றிக்கொண்ட கொடுமை.. கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை : மீட்கப்பட்ட கடிதம்..!

சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்தினர், தங்களிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மோகன் உள்ளிட்ட நான்கு பேரும் உயிர் இறந்து கிடந்தனர்.அதில் மோகனின் முகத்தில் மட்டும் பிளாஸ்டிக் கவர் இறுக்கமாக சுற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒசூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த  ஓசூர் காவல்துறையினர், சடலங்களை மீட்டனர் . அப்போது அங்கு மோகன் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று அங்கு கிடந்தது .

அதில், தான் ஆன்லைனில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக வெளியிலும் வங்கியிலும் கடன் வாங்கி முதலீடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் சுமை அதிகரித்ததாகவும், வெளியில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 


ப்ளாஸ்டிக் பையால் சுற்றிக்கொண்ட கொடுமை.. கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை : மீட்கப்பட்ட கடிதம்..!

அதனால் வேறு வழியின்றி தற்கொலை முடிவு எடுத்ததாகவும், தங்கள் முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் மோகனே விஷம் கலந்து கொடுத்திருக்கவேண்டும் என்கின்றனர் காவல்துறையினர். மூவரும் இறந்த பின் தானும் விஷமருந்திய மோகன், உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக முகத்தில் பிளாஸ்டிக் கவரை இறுக்கமாக சுற்றிக்கொண்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர் காவல்துறையினர். கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செருப்பால் அடித்ததாக ’டிக்டாக் புகழ் சூர்யாதேவி’ மீது ’சிக்கி’ புகார் - மதுரை போலீஸ் வழக்குப்பதிவு

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget