மேலும் அறிய

நெல்லை: லஞ்ச புகாரில் கையும் களவுமாக சிக்கிய நில அளவையர், உதவியாளர்

அப்போது அவர் அந்த பணத்தை தன்னுடைய உதவியாளர் சாந்தியிடம் கொடுக்குமாறு கூறினார்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை அடுத்த வடகரை பகுதியைச் சேர்ந்தவர் புதுமாடசாமி(44). இவர் தேங்காய் வியாபாரியாக இருந்து வருகிறார். இவரது சகோதரர் மகாராஜன். இவர்கள்  இருவரும் தங்களுக்கு சொந்தமான 52 சென்ட் இடத்தை தனித்தனியாக பட்டா போடுவதற்கு கங்கைகொண்டான் பகுதி-1 கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நிலத்தை அளவு செய்து பட்டா வழங்கும் நடவடிக்கைகளுக்கு  நில அளவையர் லிங்கம்மாள்  பட்டா ஒன்றிற்கு ரூ. 30,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத சகோதரர்கள் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.  


நெல்லை: லஞ்ச புகாரில் கையும் களவுமாக சிக்கிய நில அளவையர், உதவியாளர்

தொடர்ந்து நில அளவையர் லஞ்சம் கேட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா ஒன்றுக்கு ரூ. 25,000 தருவதாக பேசியுள்ளனர். எனினும்  லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து  நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெக்லரின் எஸ்கால் தலைமையில் அவர்  அறிவுறுத்தலின்படி  நில அளவை செய்வதற்கு பணத்தை புதுமாடசாமியின் சகோதரர் நில அளவையர் லிங்கமாவிடம் கொடுத்தார். அப்போது அவர் அந்த பணத்தை தன்னுடைய உதவியாளர் சாந்தியிடம் கொடுக்குமாறு கூறினார். சாந்தி அதனை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து லஞ்ச பணம் 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்  நெல்லை லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) மனோஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லஞ்ச புகாரில் நில அளவையர் மற்றும் உதவியாளர் என இரண்டு பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget