மேலும் அறிய

நாகை: ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறு; தட்டிக்கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தேவூர் அரசு மதுபான கடையில் ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறு. தட்டி கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..

தேவூரில் டாஸ்மாக் கடையில் ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் மதியம் 1:30 மணி அளவில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி புகழேந்திரன், அஜித் ஆகிய இருவரும் மதுபானம் கேட்டு தகாரறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர்கள் உடனடியாக  மேற்பார்வையாளர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது விற்பனை செய்த பணத்தை வங்கியில் கட்ட வந்த விஜயகுமார் அவசரக்கதியில் வந்து கீவளூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளார்.


நாகை:  ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறு; தட்டிக்கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

முன்னதாக மதுபான கடையில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி மதுபானம் கேட்டவர்களை பாஸ்கர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மது போதை தலைக்கேறிய நிலையில் நேற்று இரவு  பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலச்சுந்தரம் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.

இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்ததின் பேரில் DSP பாலகிருஷ்ணன்,காவல் ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்து பின்னர் புகழேந்திரன், அஜித் உள்ளிட்ட  நான்கு பேரை கைது செய்து கீவலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப் பகலில் ஆயுதத்தை காட்டி மதுபானம் கேட்டதும் தட்டி கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய  சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget