மேலும் அறிய

அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை: 22 சவரன் தங்கம் 4 லட்சம் ரொக்கம் கொள்ளை

திருவண்ணாமலையில் என்ஜினீயர், அரசு பேருந்து நடத்துனர் வீடுகளில் மர்ம நபர்கள் 22 பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி உள்ளனர்.

திருவண்ணாமலையில் என்ஜினீயர், அரசு பேருந்து நடத்துனர் வீடுகளில் மர்ம நபர்கள் 22 பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சி பகுதி சாரோன் கரியார் செட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மும்பையில் மரைன் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சௌவுமியா வயது (29) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராதாகிருஷ்ணன் விடுமுறைக்கு திருவண்ணாமலைக்கு வந்து விட்டு கடந்த வாரம் மீண்டும் மும்பை திரும்பினார். சௌவுமியா நேற்று முன்தினம் கொளக்குடியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு மகனுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைக்கப்பட்டு உள்ளதாக அக்கம்பக்கத்தினர் சௌவுமியாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தன இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 


அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை: 22 சவரன் தங்கம் 4 லட்சம் ரொக்கம் கொள்ளை

 

மேலும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததோடு அதில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதே வீட்டு பக்கத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ஜெய்சங்கர் என்பவரின் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது. இவரது மனைவி மற்ற மற்றும் குழந்தைகள் சங்கராபுரத்திற்கு சென்று உள்ளனர். ஜெய்சங்கர் இரவு வெளியே சென்று விட்டு அதிகாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அவரது வீட்டிற்கு முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த துணி பைகளில் இருந்து துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அரிசி பையில் மறைத்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து தெரியவந்தது. ஆகிய இருவர் வீடுகளிலும் மர்ம நபர்கள் நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 


அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை: 22 சவரன் தங்கம் 4 லட்சம் ரொக்கம் கொள்ளை

 

மேலும் இது குறித்து ஜெய்சங்கர் மற்றும் சௌவுமியா ஆகிய இருவரும் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் தனித் தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையடித்து சென்ற வீட்டிற்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து பீரோ மற்றும் வீடுகளில் உள்ள பல்வேறு இடங்களில் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இருவீட்டிலும் மொத்தம் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரணடு வீட்டுகளிலும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget