மேலும் அறிய

10 நாள் குழந்தையுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: காதல் திருமணம் கசந்தது ஏன்?

வயிற்றில் குழந்தை இருக்கும் போது அடித்து ரத்த காயங்கள் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டுகிறார் காதல் மனைவி.

சேலத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பச்சிளம் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

10 நாள் குழந்தையுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: காதல் திருமணம் கசந்தது ஏன்?

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 30 பவுன் வரதட்சணை கேட்டு நந்தினியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் நந்தினி புகார் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனிடையே நந்தினிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. 

10 நாள் குழந்தையுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: காதல் திருமணம் கசந்தது ஏன்?

இந்த நிலையில் பிறந்து 10 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்க வந்த நந்தினி திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். 

இது பற்றி நந்தினி கூறுகையில், நீண்ட ஆண்டுகளாக காதலித்து பல எதிர்ப்புகளை கடந்து திருமணம் செய்து கொண்டோம், காதலிக்கும் போது தன்மீது பாசமாக இருந்த கணவர் திருமணத்திற்கு பிறகு அவரது தாய் பேச்சை கேட்டுக்கொண்டு தன்னை அடுத்து துன்புறுத்துகின்றனர் என்றும், ஒரு கட்டத்தில் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது அடித்து ரத்த காயங்கள் ஏற்படுத்தியதாகவும் கூறினார். கழுத்துப் பகுதியில் அடித்து கணவரின் தாய் துன்புறுத்தியதாக கூறினார்கள். கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அடித்து வரதட்சனை கொடுமை செய்த மாமியார் மற்றும் கணவர் மீது பல இடங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட வந்ததாகவும், காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காததால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்ததாக கூறினார். உடனடியாக தனது கணவர் மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நந்தினி கோரிக்கை விடுத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Embed widget