மேலும் அறிய

கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!

காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால் மனமுடைந்த தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். மற்றொரு மகள் குழாயைப் பிடித்தபடியே கிணற்றில் விடிய விடிய தவித்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் ( 50). பெங்களூருவில்  டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்சவேணி (45). இவர்களுக்கு பிரியா (19), திரிஷா (17) ஆகிய 2 மகள்களும், விஷ்ணு (14) என்ற மகனும் உள்ளனர் . இதில் பிரியா பர்கூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். திரிஷா மத்தூர் அரசுப்பள்ளியில் பிளஸ்-2 வும், சிறுவன் விஷ்ணு மிண்டிகிரி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில் பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் திருப்பதி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது . இவர்களின் காதல் குறித்து அறிந்த மகாலிங்கம், அம்சவேணி ஆகியோர் மகளுக்கு திருமணம் செய்ய குண்டலானூர் பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு  நிச்சயம்செய்து வைத்துள்ளனர். இவர்களுடைய திருமணம் அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.


கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!
இதனால் காதலர்கள் விஷம் குடித்தனர். தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறுவதை அறிந்த திருப்பதி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதனைத்தொடர்ந்து அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே காதலன் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரியா, விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். பெண்ணை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகள் காதலனுக்காக விஷம் குடித்ததால் மனமுடைந்த அம்சவேணி, தனது கணவரிடம் என்ன கூறுவது என்று  தெரியாமல் தவித்து வந்துள்ளார். தனது கணவர் பெங்களூருவில் இருந்து வருவதற்கு முன்னதாகவே குடும்பத்தினருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள அவர் முடிவு செய்தார். 


கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!

அம்சவேணி தனது 2-வது மகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணு ஆகியோரை அழைத்துக்கொண்டு தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில்  நள்ளிரவு 12 மணியளவில் குதித்தார்.  கிணற்றில் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில், நீரில் விழுந்து தத்தளித்த மாணவி திரிஷா கிணற்றில் அங்கிருந்த குழாயை பிடித்து உயிர் தப்பினார். அதேசமயம் அம்சவேணியும், சிறுவன் விஷ்ணுவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குழாயை பிடித்தவாறு விடிய, விடிய கிணற்றில் தவித்த திரிஷா காலையில் மேலே ஏறிவந்து கிராமத்தினருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் கிணற்றுக்கு விரைந்து வந்து இதுகுறித்து அவர்கள் மத்தூர் காவல்நிலையத்தில், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து அம்சவேணி மற்றும் அவரது மகன் விஷ்ணு ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் தாய், மகன் 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கட்டாயத் திருமண முயற்சியால் விஷம் குடித்த மகள்.. தாயும் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை..!

தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, மத்தூர் காவல் ஆய்வாளர்  முருகன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால் மனமுடைந்த தாய் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget