மேலும் அறிய

Mayiladuthurai: மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? மயிலாடுதுறையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு!

டாஸ்மார்க் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டு மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடை  பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மார்க் மது பாட்டில்களின் அதிகபட்ச விலை வரிகள் உட்பட அதன் இறுதி விலை ரூபாய் என்று மது பாட்டில்களிலேயே  பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு  மது பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் டாஸ்மார்க் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இதனை அமைச்சர் தான் வசூலிக்க சொன்னதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் கடந்த சில நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியிருந்தார்.


Mayiladuthurai: மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? மயிலாடுதுறையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு!

இருந்த போதிலும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் கூறி வருவதைக் காண முடிகிறது. இது தொடர்பாக மாநில வாணிப கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் விடுத்தார். டாஸ்மாக் , மதுக்கூடங்கள் திறப்பில் எந்த வித விதி மீறல்களும் இருக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுவகைகளை விற்கக் கூடாது. டாஸ்மாக் மதுக்கூடங்கள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


Mayiladuthurai: மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? மயிலாடுதுறையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு!

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு மதுவை விற்றால் அபராதத்தை வசூலிக்க வேண்டும். சட்ட விரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மதுபானங்களின் விலை பட்டியலை டாஸ்மாக் கடையின் முன் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் திறந்து இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சட்ட விரோத மதுக்கூடங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் எஸ்.பி மூலம் நடவடிட்க்கை எடுக்க வேண்டும். ஏதேனும் விதி மீறல்கள் இருந்தால் அதற்குரிய அபராதம் வசூலிக்க வேண்டும். பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என்றார். 


Mayiladuthurai: மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? மயிலாடுதுறையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு!

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை உள்ள பகுதிகளில் கூடுதலாக மதுபான பாட்டில்களுக்கு பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை கடையை மூடுமாறு பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பேனரில் தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மார்க்களில் அதிகபட்ச விலை வரிகள் உட்பட என பிரின்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அனைத்து டாஸ்மார்க்ளிலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அந்த பத்து ரூபாய் யாருக்கு செல்கிறது என்று தெரியும் வரை கூடுதல் விலை விற்கக் கூடாது அப்படி மீறி விற்பனை செய்தால் டாஸ்மார்க் இழுத்து மூடப்படும் அந்த கூடுதல் பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மார்க் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று பேனரில் உள்ளது.  


Mayiladuthurai: மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? மயிலாடுதுறையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு!

இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று சித்தர்காடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை உள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. பேனரை வைத்தவர்களே பேனரை கழட்டி எடுத்து சென்று விட்டதாகவும், டாஸ்மார்க் கடை மேலாளர் தெரிவித்தார். ஆனாலும் அங்கு மதுபானம் வாங்கி வந்தவர்களிடம் கேட்டபோது 130 ரூபாய் குவாட்டர் மது பாட்டிலுக்கு 140 ரூபாய் டாஸ்மார்க் கடையில் வாங்குவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்து சென்றனர். இது ஒருபுறம் இருக்க மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதில் எதிர்த்து குரல் கொடுக்கும் பொதுமக்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ஆவின் பால் விற்பனை நடைபெறுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Education Scholarship: முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
Embed widget