மேலும் அறிய

சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

சீர்காழி அருகே காரில் சாராய கடத்தி வந்த இருவரை தனிப்பட்ட காவல்துறையினர் காருடன் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  கோவில்பத்து  பகுதியில்  காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக சிறப்பு தனிப்படை காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து  கோவில் பத்து பகுதிகயில் தனிப்பட்ட காவல்துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் 2 பேர் காரில் சென்றுள்ளார். உடனடியாக அந்த காரை நிறுத்தி தனிப்பட்ட காவல்துறையினர் சோதனை செய்தனர். 


சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

சோதனையில் காரில் உள்ளே  ஆறு சாக்கு மூட்டைகள் இருந்துள்ளது, உடனடியாக அதனை பிரித்து பார்த்தபோது சாக்கு மூட்டைகளில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,250 சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, காரில் வந்தவர்களிடம் சிறப்பு தனிப்பட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் அடுத்துள்ள செல்லூரை சேர்ந்த 39 வயதான தமிழ் மற்றும் திருத்துறைப்பூண்டி இடும்பாவனம், மங்களபுரத்தை சேர்ந்த 29 வயதான சூரியமூர்த்தி என்பதும், இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காரில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து சூரியமூர்த்திமற்றும் தமிழ் ஆகிய இரண்டு பேரையும் தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்க அனுமதி மறுத்திருத்தது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை விதித்துள்ளது. 


சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

குறிப்பாக மது பானத்திற்கு அடிமையானவர்கள் பலர் எவ்வாறாவது தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுவதும், கள்ளச்சாராயத்தையும் நாடி வந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மாவட்டத்தில் ஏராளமான கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஊர் அடங்கிய பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தும் கள்ளச் சாராய விற்பனை மூலம் அதிக வருவாய் வருவதை உணர்ந்த பலர் பணத்தின் மீது உள்ள பற்றில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்  மாவட்ட முழுவதும் பல்வேறு கள்ளச்சாராய ஒழிப்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதிலும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிரிழப்பு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?
மயிலாடுதுறையில் தவெக பெண் தொண்டருக்கு நேர்ந்த அவலம் : ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடித்த மோதல்!
மயிலாடுதுறையில் தவெக பெண் தொண்டருக்கு நேர்ந்த அவலம் : ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடித்த மோதல்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget