மேலும் அறிய

சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

சீர்காழி அருகே காரில் சாராய கடத்தி வந்த இருவரை தனிப்பட்ட காவல்துறையினர் காருடன் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  கோவில்பத்து  பகுதியில்  காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக சிறப்பு தனிப்படை காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து  கோவில் பத்து பகுதிகயில் தனிப்பட்ட காவல்துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் 2 பேர் காரில் சென்றுள்ளார். உடனடியாக அந்த காரை நிறுத்தி தனிப்பட்ட காவல்துறையினர் சோதனை செய்தனர். 


சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

சோதனையில் காரில் உள்ளே  ஆறு சாக்கு மூட்டைகள் இருந்துள்ளது, உடனடியாக அதனை பிரித்து பார்த்தபோது சாக்கு மூட்டைகளில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,250 சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, காரில் வந்தவர்களிடம் சிறப்பு தனிப்பட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் அடுத்துள்ள செல்லூரை சேர்ந்த 39 வயதான தமிழ் மற்றும் திருத்துறைப்பூண்டி இடும்பாவனம், மங்களபுரத்தை சேர்ந்த 29 வயதான சூரியமூர்த்தி என்பதும், இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காரில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து சூரியமூர்த்திமற்றும் தமிழ் ஆகிய இரண்டு பேரையும் தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்க அனுமதி மறுத்திருத்தது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை விதித்துள்ளது. 


சீர்காழியில் சாராயம் கடத்திய இருவர் கைது- 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

குறிப்பாக மது பானத்திற்கு அடிமையானவர்கள் பலர் எவ்வாறாவது தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுவதும், கள்ளச்சாராயத்தையும் நாடி வந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மாவட்டத்தில் ஏராளமான கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஊர் அடங்கிய பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தும் கள்ளச் சாராய விற்பனை மூலம் அதிக வருவாய் வருவதை உணர்ந்த பலர் பணத்தின் மீது உள்ள பற்றில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்  மாவட்ட முழுவதும் பல்வேறு கள்ளச்சாராய ஒழிப்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதிலும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிரிழப்பு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget