மேலும் அறிய

ஏடிஎம்களில் முதியவர்களை குறிவைத்து மோசடி...சீர்காழியில் இளைஞர் சிக்கியது எப்படி..?

சீர்காழியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் நபர்களை ஏமாற்றி பணம் திருடி வந்த இளைஞரை சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் கடந்த டிசம்பர் 28 -ம் தேதி பழையார் சுனாமி நகரை சேர்ந்த 50 வயதான மணிமொழி என்பவர் தனது வங்கிக் கணக்கில் 20,000 ரூபாய் பணம் செலுத்த வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த இளைஞர் இதனை பயன்படுத்தி முதலில் 2000 ரூபாய் தொகையை வங்கி கணக்கில் செலுத்தி சரி பார்த்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறியுள்ளார். பின்பு மீதமிருந்த 18,000 ரூபாய் தொகையை வங்கி கணத்தில் செலுத்தி விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டார்.


ஏடிஎம்களில் முதியவர்களை குறிவைத்து மோசடி...சீர்காழியில் இளைஞர் சிக்கியது எப்படி..?

ஆனால் அந்த முதியவர் தனது வங்கி கணக்கில் தொகை சரிபார்த்த போது தனது வங்கி கணக்கில் 2000 ரூபாய் மட்டும் செலுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் முதலில் செலுத்தப்பட்ட 2000 ரூபாய் முதியவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதும், மீதம் 18000 ரூபாய் ஆயிரம் முதியவர் வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் வேறு ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். 


ஏடிஎம்களில் முதியவர்களை குறிவைத்து மோசடி...சீர்காழியில் இளைஞர் சிக்கியது எப்படி..?

தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இதேபோல் டிசம்பர் 29 -ம் தேதி சீர்காழியை அடுத்த கீரா நல்லூர் பகுதியை சேர்ந்த 35 வயதான அமுதா என்பவரும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அதே பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம்மில் தனது கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்றுள்ளார். அவர் வங்கி கணக்கில் 23 ஆயிரத்து 800 ரூபாய் பணம் இருந்துள்ளது. அமுதாவிற்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கத் தெரியாததால் அங்கு மாஸ்க் அணிந்து நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞரிடம் தனது ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் கூறி பணம் எடுத்து தரஉதவி கேட்டுள்ளார். 



ஏடிஎம்களில் முதியவர்களை குறிவைத்து மோசடி...சீர்காழியில் இளைஞர் சிக்கியது எப்படி..?

அப்போது அந்த இளைஞர் ஏ.டி.எமில் கார்டை செருகி பரிவர்த்தனை செய்து தங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வரவில்லை என்றும் சொல்லிவிட்டு வெளியில் வேகமாக சென்றுவிட்டார். இதன் பின்னர் அமுதா ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அமுதாவின் செல்போனிற்கு வங்கிக் கணக்கில் இருமுறை 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 3700 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததுள்ளது. இதனால் பதறிப்போன அமுதா சீர்காழி பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு நேரில் சென்று வங்கி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து விசாரித்தார். அவரது கணக்கை வங்கி அதிகாரிகள் பரிசோதித்து அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்தபோது அந்த இளைஞர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றதும் அமுதாவின் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியதும் தெரிய வந்தது. 


ஏடிஎம்களில் முதியவர்களை குறிவைத்து மோசடி...சீர்காழியில் இளைஞர் சிக்கியது எப்படி..?

இதுகுறித்து அமுதா சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு புகார்களின் பெற்றுக் கொண்ட சீர்காழி காவல்துறையினர் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தேடி வந்த நிலையில் இந்த நூதனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் இனியவன் என்பது தெரிய வந்தது. மேற்படி இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் மட்டும் இதுபோல் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் இனியவனை கைது செய்து சீர்காழி ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Embed widget