மேலும் அறிய

இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!

"மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று சிறுவர்களை மடக்கிய போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு 5 திருக்குறள் கூறச் சொல்லி நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சீர்காழி: "இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிக்கக் கூடாது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் எக்காரணம் கொண்டும் வாகனங்களை இயக்கக் கூடாது" என்பதை வலியுறுத்தி சீர்காழியில் போக்குவரத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று சிறுவர்களை நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனையாகத் 'திருக்குறள்' கூறச் செய்து, பின்னர் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பிய சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

எஸ்பி உத்தரவின் பேரில் தீவிர வாகன சோதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விபத்துக்களைக் குறைக்கவும், சாலை பாதுகாப்பு விதிகளை வாகன ஓட்டிகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில், மாவட்டத்தின் முக்கியப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையிலும், விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியில், சீர்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் (SI) மணியரசன், காவல் ஏட்டு கார்த்திக் மற்றும் போலீசார் முன்னிலையில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

போலீசாரின் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் எச்சரிக்கை

இந்த வாகன சோதனையின் போது, அவ்வழியாக விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை இயக்கி வந்தவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், சாலை பாதுகாப்பு குறித்துப் போலீசார் பின்வரும் கடுமையான அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கட்டாய ஹெல்மட்: இருசக்கர வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவருமே கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும்.

மதுபோதைக்குத் தடை: மது போதையில் வாகனங்களை இயக்கினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கை மூலம் கடுமையான சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

ரூ.25,000 அபராதம்: மிக முக்கியமாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் (Minors) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது. மீறி இயக்கினால், வாகனத்தை இயக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களுக்கு வாகனம் வழங்கிய பெற்றோர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும். அத்துடன் மோட்டார் வாகன சட்டப்படி ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

சிறுவர்களுக்கு போலீசாரின் நூதன 'திருக்குறள்' தண்டனை

போலீசாரின் இந்த வாகன சோதனை தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் (Triples) மூன்று சிறுவர்கள் ஆபத்தான முறையில் அதிவேகமாகப் பயணித்து வந்தனர். இதைப் பார்த்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணியரசன் மற்றும் போலீசார், அதிர்ச்சியடைந்து அந்தச் சிறுவர்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மூவருமே 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதும், அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லை என்பதும் தெரியவந்தது. வழக்கமான பாணியில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பதை விட, அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், மனரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போலீசார் ஒரு நூதன முயற்சியைக் கையாண்டனர். பிடிபட்ட மூன்று சிறுவர்களையும் வரிசையாக நிற்க வைத்த போலீசார், "நீங்கள் செய்த தவறை உணரும் வகையில், ஆளுக்கு தலா ஐந்து திருக்குறள்களைத் துல்லியமாகக் கூற வேண்டும்" என்று நிபந்தனை விதித்தனர். போலீசாரின் இந்த நூதன தண்டனையைக் கேட்டு முதலில் திகைத்த சிறுவர்கள், பின்னர் தாங்கள் பள்ளியில் கற்ற திருக்குறள்களை ஒவ்வொன்றாக யோசித்து போலீசாரிடம் மனப்பாடமாகக் கூறினர். சிறுவர்கள் திருக்குறள் கூறி முடித்ததும், அங்கிருந்த போலீசார் அவர்களைப் பாராட்டி, இனிமேல் பைக் ஓட்டக் கூடாது என அறிவுரை வழங்கினர்.

பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை

சிறுவர்கள் திருக்குறள் கூறி முடித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களை அலைபேசி மூலம் உடனடியாகத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். சீர்காழி தென்பாதி பகுதிக்கு நேரில் வந்த பெற்றோர்களிடம், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிருக்கான ஆபத்துகள் மற்றும் சட்ட சிக்கல்களைப் போலீசார் விரிவாக எடுத்துரைத்தனர்.

"இனி ஒருபோதும் தங்களது பிள்ளைகளிடம் இருசக்கர வாகன சாவியைக் கொடுக்க மாட்டோம்" என்று பெற்றோர்கள் போலீசாரிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து, முதற்கட்ட எச்சரிக்கையாகச் சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்த போலீசார், இனிமேல் விதிகளை மீறினால் பைக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25,000 அபராதத்துடன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். சீர்காழி போக்குவரத்து போலீசாரின் இந்தத் தமிழ் கலந்த நூதன விழிப்புணர்வு நடவடிக்கை, அங்கு கூடின பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்
Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
Embed widget