மேலும் அறிய

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் இக்காமா பாஷா மயிலாடுதுறையில் கைது

மயிலாடுதுறையில் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர் இக்காமா சாதிக் பாட்ஷா உள்ளிட்ட இருவரை செம்பனார்கோவில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறையில் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நீடூரை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர் இக்காமா சாதிக் பாட்ஷா உள்ளிட்ட இருவரை செம்பனார்கோவில் காவல்துறையினர் கைது செய்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

அமெரிக்காவில் விவாகரத்து பெற்ற தம்பதி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரங்கக்குடி காயிதே மில்லத் தெருவில் வசித்து வருபவர் 76 வயதான ஹிதயத்துல்லா. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். நான்கு பேரும் திருமணமாகி தனிதனியாக வசித்து வருகின்றனர். இவரது மூன்றாவது மகன் ரிஸ்வான் என்பவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இப்ராஹிம் மகள் ரமீஸ்பர்வீன் என்பவருடன் கடந்த 2014 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரிஸ்வான்- ரமீஸ் பர்வீன் இருவரும் அமெரிக்க நாட்டின் வசித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்கா நாட்டின் முறைப்படி அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். 


ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் இக்காமா பாஷா மயிலாடுதுறையில் கைது

இஸ்லாமியர்கள் முறைப்படி விவாகரத்து 

ரமீஸ் பர்வீனுக்கு நஷ்ட ஈடாக இவர்கள் வசித்து வந்த அமெரிக்கா யூ.எஸ் டாலர் 50 ஆயிரம் இந்திய ரூபாய் மதிப்பில் 42 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த மே 08-ம் தேதி அன்று அரங்ககுடியில் உள்ள ஜமாத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் விவகாரத்து கொடுக்கப்பட்டது. முஸ்லிம் மத முறைப்படி நீடூரில் பத்வாவும் வாங்கிவிட்டனர். அதனைத் தொடர்ந்து ரமீஷ் பர்வீனுக்கு திருமணத்தின் போது செய்யப்பட்ட 40 சவரன் தங்க நகையை ரமீஸ் பர்வீனிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டது. 

மிரட்டல் விடுத்த இக்காமா சாதிக் பாட்ஷா 

இந்த சூழலில் மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளரான இக்காமா சாதிக் பாட்ஷா என்பவர் இந்த விவாகரத்து தொடர்பாக ரிஸ்வான் தந்தை ஹிதயத்துல்லாவை கடந்த 16-ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும். பணம் கொடுக்க வில்லை என்றால் முட்டி போட வைத்து பணத்தை பெறுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 


ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் இக்காமா பாஷா மயிலாடுதுறையில் கைது

காவல் துறையினர் விசாரணை 

இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஹிதயத்துல்லா புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இக்காமா சாதீக் பாட்ஷா மற்றும் அவரது நண்பர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஐயூப்கான் ஆகிய இருவரை கைது செய்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து செம்பனார்கோவிலில் உள்ள தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் இருவருரையும் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் 

இக்காமா சாதிக் பாட்சா மீது கொலை முயற்சி, வழிபறி, கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 20 வழக்குகள் இதுவரை போடப்பட்டுள்ளது. கடந்த 2022 -ஆம் ஆண்டு காவல்துறையினரை துப்பாக்கியை காட்டி மிரட்டியபோது கைது செய்யப்பட்ட இக்காமா சாதிக் பாட்சா மீது போடப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்க மாற்றப்பட்டது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளரான இக்காமா சாதிக் பாட்சா ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக இக்காமா சாதிக் பாட்சா வசிக்கும் நீடூர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த இக்காமா பாஷா

மயிலாடுதுறை மாவட்டம், நீடூரை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் இக்காமா பாஷா என்கிற 40 வயதான சாதிக் பாஷா. இவர் சென்னையில் இக்காமா என்னும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வருவதால் அதே பெயரில் பிரபலமானார். மேலும் சாதிக்பாஷா, தனது இக்காமா என்ற தற்காப்பு கலை அகாடமியில் தற்காப்பு கலை கற்க வந்த பலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதற்கு உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டதற்கு ஆளானவர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Mahindra Thar Price Hike: தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Embed widget