மேலும் அறிய

நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

சாராயம் விற்பனை செய்யச்சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாக முன்னாள் சாராய வியாபாரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சாராயம் விற்க சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகவும், சாராயம் விற்காமல் திருந்தி இருந்த தன்மீதும், தன் மகன்கள் மீதும் பெரம்பூர் காவல்நிலையத்தில் பொய்வழக்குப் போடுவதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் சாராய வியாபாரி புகார்மனு அளித்திருப்பது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் மகன்களுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பெரம்பூர் காவல்துறையினர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, குடிப்பழக்கத்திற்கு அடிமையான நான் காரைக்கால் பகுதிக்கு சென்று அங்கு மது அருந்தி, புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மது விலை குறைவு என்பதால் மதுபாட்டில்கள் வாங்கி வருவேன். மேலும், அதனை தெரிந்தவர்கள் கேட்டால் கொடுத்துவிட்டு பணம் வாங்கி கொள்வேன். 


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

அப்படி இருந்தபோது மதுகடத்தியதாக வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியதாக கூறி காவல்துறையினர் என்னை கைது செய்தனர். தொடர்ந்து சாராயம் விற்பனை செய் என்று காவல்துறையினர் கூறினர். அதனால் சாராய விற்பனை செய்து வாரந்தோறும் காவல்துறையினருக்கு 7 ஆயிரம் ரூபாய் மாமுல் பணமும் அவ்வப்போது மீன், கறி உள்ளிட்டவைகளும் வாங்கி கொடுத்து வந்தேன்.  இந்நிலையில் எனது மனைவி இறந்த நிலையில் மகன்களுக்கு திருமணமாகி மருமகள்கள் வந்துவிட்டதால் சாராய விற்பனையை நிறுத்திவிட்டேன். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இனி சாராய விற்பனைசெய்யமாட்டேன் திருந்தி வாழவிரும்புவதாக எழுதிகொடுத்து சென்றேன்.  


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

ஆனால், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சண்முகம், விக்கி, பிரேம் உள்ளிட்ட  காவல்துறையினர் சாராயம் விற்பனை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டுமென்று கூறி மிரட்டி என்மீதும், எனது மகன்கள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். சென்னையில் வேலைபார்த்து வந்த எனது மகன் தீனாஅரசன் ஊருக்கு வந்தபோது அவர் மீது சாராயம் விற்றதாக பொய்வழக்கு போட்டு என்னிடம் பணம்கேட்டு மிரட்டுகின்றனர். எங்கிருந்தோ சாராய பாக்கெட்டுக்களை கொண்டுவந்த என்வீட்டு முன்பு போட்டு உடைத்து காவல்துறையினர் வீடியோ எடுத்து செல்கின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து திருந்திவாழ நினைக்கும் என்னையும், எனது குடும்பத்தாரையும் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். 


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் காவல்துறையினர் மது விற்பனையை கண்டுகொள்ளாமல், மது விற்பனைக்கு துணைபோகும் செயல் நடைபெற்று வருவதாகும், இதற்கு எடுத்துக்காட்டாக சாராய வியாபாரிக்கு துணை போனதாக கூறி சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் கடந்த மாதம் பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் நீக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த சம்பவம் நடந்தேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget