மேலும் அறிய

நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

சாராயம் விற்பனை செய்யச்சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாக முன்னாள் சாராய வியாபாரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சாராயம் விற்க சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகவும், சாராயம் விற்காமல் திருந்தி இருந்த தன்மீதும், தன் மகன்கள் மீதும் பெரம்பூர் காவல்நிலையத்தில் பொய்வழக்குப் போடுவதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் சாராய வியாபாரி புகார்மனு அளித்திருப்பது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் மகன்களுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பெரம்பூர் காவல்துறையினர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, குடிப்பழக்கத்திற்கு அடிமையான நான் காரைக்கால் பகுதிக்கு சென்று அங்கு மது அருந்தி, புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மது விலை குறைவு என்பதால் மதுபாட்டில்கள் வாங்கி வருவேன். மேலும், அதனை தெரிந்தவர்கள் கேட்டால் கொடுத்துவிட்டு பணம் வாங்கி கொள்வேன். 


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

அப்படி இருந்தபோது மதுகடத்தியதாக வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியதாக கூறி காவல்துறையினர் என்னை கைது செய்தனர். தொடர்ந்து சாராயம் விற்பனை செய் என்று காவல்துறையினர் கூறினர். அதனால் சாராய விற்பனை செய்து வாரந்தோறும் காவல்துறையினருக்கு 7 ஆயிரம் ரூபாய் மாமுல் பணமும் அவ்வப்போது மீன், கறி உள்ளிட்டவைகளும் வாங்கி கொடுத்து வந்தேன்.  இந்நிலையில் எனது மனைவி இறந்த நிலையில் மகன்களுக்கு திருமணமாகி மருமகள்கள் வந்துவிட்டதால் சாராய விற்பனையை நிறுத்திவிட்டேன். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இனி சாராய விற்பனைசெய்யமாட்டேன் திருந்தி வாழவிரும்புவதாக எழுதிகொடுத்து சென்றேன்.  


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

ஆனால், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சண்முகம், விக்கி, பிரேம் உள்ளிட்ட  காவல்துறையினர் சாராயம் விற்பனை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டுமென்று கூறி மிரட்டி என்மீதும், எனது மகன்கள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். சென்னையில் வேலைபார்த்து வந்த எனது மகன் தீனாஅரசன் ஊருக்கு வந்தபோது அவர் மீது சாராயம் விற்றதாக பொய்வழக்கு போட்டு என்னிடம் பணம்கேட்டு மிரட்டுகின்றனர். எங்கிருந்தோ சாராய பாக்கெட்டுக்களை கொண்டுவந்த என்வீட்டு முன்பு போட்டு உடைத்து காவல்துறையினர் வீடியோ எடுத்து செல்கின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து திருந்திவாழ நினைக்கும் என்னையும், எனது குடும்பத்தாரையும் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். 


நானே விட்டுட்டேன்; போலீஸ் விடமாட்டேங்குறாங்க! - எஸ்.பியிடம் மன்றாடிய முன்னாள் சாராய வியாபாரி!

தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் காவல்துறையினர் மது விற்பனையை கண்டுகொள்ளாமல், மது விற்பனைக்கு துணைபோகும் செயல் நடைபெற்று வருவதாகும், இதற்கு எடுத்துக்காட்டாக சாராய வியாபாரிக்கு துணை போனதாக கூறி சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் கடந்த மாதம் பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் நீக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த சம்பவம் நடந்தேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Embed widget