மேலும் அறிய

கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!

மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த கேஸ் ஸ்டவ் பழுதுநீக்கும் தொழிலாளியை, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அடுத்த அகரகீரங்குடி முட்டம், சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 42). இவர் அப்பகுதியில் கேஸ் ஸ்டவ் (எரிவாயு அடுப்பு) பழுது நீக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சிலம்பரசன் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார். இதனால் நிலை குலைந்த அந்தச் சிறுமி, அதிர்ச்சியிலும் பயத்திலும் சத்தம்போட்டு கூச்சல் எழுப்பியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த கொடூரன்

சிறுமி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் சிறுமியை கடுமையாக மிரட்டியுள்ளார். "இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவேன்" என சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது வேறு யாருடமோ சொல்லக் கூடாது என பயமுறுத்தி அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

தாயிடம் கதறிய சிறுமி

சிலம்பரசனின் மிரட்டலால் மிரண்டுபோன அந்தச் சிறுமி, பயத்தில் அழுதுகொண்டே தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதையும், பதற்றமாக இருப்பதையும் கண்ட அவரது தாயார், அவரிடம் கனிவோடு விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் தொல்லை குறித்தும், சிலம்பரசன் விடுத்த கொலை மிரட்டல் குறித்தும் அழுதுகொண்டே தாயாரிடம் சிறுமி விவரித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியும், குற்றவாளிக்கு உரிய தண்டைனை பெற்றுத்தர வேண்டும் என்றும் முடிவு செய்தார். உடனடியாக அவர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கை மற்றும் கைது

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் மகளிர் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிலம்பரசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences Act) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தலைமறைவாக முயன்ற சிலம்பரசனை மகளிர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நீதிமன்றக் காவல் மற்றும் சிறைவாசம்

கைது செய்யப்பட்ட கேஸ் ஸ்டவ் தொழிலாளி சிலம்பரசனை, போலீசார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் (Mayiladuthurai Court) ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட சிலம்பரசனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, போலீஸார் சிலம்பரசனை சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்களுக்குக் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

"குழந்தைகளிடம் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். யாராவது தவறான முறையில் தொட்டாலோ அல்லது மிரட்டினாலோ உடனடியாகப் பெற்றோரிடம் கூற வேண்டும் என்ற விழிப்புணர்வை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடையே சற்றே நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
Embed widget