மேலும் அறிய

கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!

மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த கேஸ் ஸ்டவ் பழுதுநீக்கும் தொழிலாளியை, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அடுத்த அகரகீரங்குடி முட்டம், சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 42). இவர் அப்பகுதியில் கேஸ் ஸ்டவ் (எரிவாயு அடுப்பு) பழுது நீக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சிலம்பரசன் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார். இதனால் நிலை குலைந்த அந்தச் சிறுமி, அதிர்ச்சியிலும் பயத்திலும் சத்தம்போட்டு கூச்சல் எழுப்பியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த கொடூரன்

சிறுமி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் சிறுமியை கடுமையாக மிரட்டியுள்ளார். "இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவேன்" என சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது வேறு யாருடமோ சொல்லக் கூடாது என பயமுறுத்தி அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

தாயிடம் கதறிய சிறுமி

சிலம்பரசனின் மிரட்டலால் மிரண்டுபோன அந்தச் சிறுமி, பயத்தில் அழுதுகொண்டே தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதையும், பதற்றமாக இருப்பதையும் கண்ட அவரது தாயார், அவரிடம் கனிவோடு விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் தொல்லை குறித்தும், சிலம்பரசன் விடுத்த கொலை மிரட்டல் குறித்தும் அழுதுகொண்டே தாயாரிடம் சிறுமி விவரித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியும், குற்றவாளிக்கு உரிய தண்டைனை பெற்றுத்தர வேண்டும் என்றும் முடிவு செய்தார். உடனடியாக அவர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கை மற்றும் கைது

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் மகளிர் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிலம்பரசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences Act) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தலைமறைவாக முயன்ற சிலம்பரசனை மகளிர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நீதிமன்றக் காவல் மற்றும் சிறைவாசம்

கைது செய்யப்பட்ட கேஸ் ஸ்டவ் தொழிலாளி சிலம்பரசனை, போலீசார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் (Mayiladuthurai Court) ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட சிலம்பரசனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, போலீஸார் சிலம்பரசனை சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்களுக்குக் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

"குழந்தைகளிடம் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். யாராவது தவறான முறையில் தொட்டாலோ அல்லது மிரட்டினாலோ உடனடியாகப் பெற்றோரிடம் கூற வேண்டும் என்ற விழிப்புணர்வை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடையே சற்றே நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Embed widget