மேலும் அறிய

மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

மயிலாடுதுறை அருகே தனது இடத்தை குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி கொண்டதால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்துக்கு உட்பட்ட  மாணிக்கபங்கு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். வயது 68. விவசாயியான இவர் தனது வீட்டிற்கு அருகே நேற்று விஷம் அருந்தி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

மேலும், இறந்த கோவிந்தராஜிடம் இருந்து கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், தனக்கு சொந்தமான 27 சென்ட் இடத்தினை கடந்த 2015- ம் ஆண்டு மாணிக்கபங்கு வள்ளுவர் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் சென்ட் 7 ஆயிரம் ரூபாய் என்று விலைபேசி ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிகொண்டு ஓர் ஆண்டு காலத்திற்குள் பாக்கி பணத்தை கொடுத்துவிட்டு இடத்தினை கிரயம் செய்து கொள்வது என்று ஒப்பந்தம் பத்திரம் செய்து கொண்டோம் . 


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

அதன்பிறகு பல முறை அவரது மகன் சோமசுந்தரத்திடம் கூறியும் அவர்கள் மீதம் பணம் கொடுக்காமல்  இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சோமசுந்தரம் இடத்தினை கிரயம் செய்துகொடுங்கள் என்று கேட்டார். அதற்கு அக்ரிமென்ட் போட்டு காலாவதியாகி விட்டது. அப்போது விற்ற விலை வேறு. தற்போது அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதனால் தற்போது சந்தை விலைக்கு பணம் கொடுங்கள். இல்லை என்றால் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கோவிந்தராஜ் கூறினார். அதன்பிறகு திடீரென்று சோமசுந்தரம் தனது இடத்தில் கொட்டகை போட்டடுள்ளார். இடம் கிரயம் செய்து கொடுக்காமல் எப்படி கொட்டகை அமைக்கலாம் என்று கூறி பஞ்சாயத்தில் முறையிட்டபோது, இதுகுறித்து ஊர் பஞ்சாயத்தார்கள் பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர். 

 


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

மார்ச் மாதம் ஊர் பஞ்சாயத்திற்கு சென்றபோது என்னை மிரட்டி, அச்சுறுத்தி 20 லட்சம் ரூபாய் விலைபோகும் இடத்தினை 4 லட்சம் ரூபாய்க்கு குறைந்த விலைக்கு நிலத்தை விற்பனை செய்வது என்று எழுதி வாங்கி கொண்டனர். இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இடத்தில் போடப்பட்ட கொட்டகையை அகற்றி இடத்தை காவல்துறையினர் மீட்டுக்கொடுக்க வேண்டும். இந்த கடித நகல் ஒன்றை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

 

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பொறையார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மிரட்டி நிலத்தை வாங்கிய ஊர் பஞ்சாயத்தார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய முதியவரின் தற்கொலை கடிதம்..!

 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget