மேலும் அறிய

ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!

மயிலாடுதுறை உணவகத்தில் கூடுதல் சாஸ் கேட்ட விவகாரத்தில், 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில், கூடுதல் ‘சாஸ்’ (Sauce) கேட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு, ஊழியர்கள் மீதான பயங்கரத் தாக்குதலாக மாறியுள்ளது. ரத்தம் வழிய வழிய ஊழியர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் ‘சாஸ்’ கேட்டதில் தொடங்கிய மோதல்

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செந்தில் என்பவர் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் உணவு சாப்பிட வந்துள்ளார். அவர் ‘சிக்கன் ரைஸ்’ ஆர்டர் செய்து சாப்பிட்டபோது, அதற்குத் தொட்டுக்கொள்ள கூடுதல் சாஸ் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்களுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, சிக்கன் ரைஸில் சிக்கன் துண்டுகள் குறைவாக இருப்பதாகக் கூறி அந்த இளைஞர் மீண்டும் உணவக ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் தலையிட்டு அந்த இளைஞரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கும்பலாக வந்து ரத்தவெறித் தாக்குதல்

உணவகத்தை விட்டுச் சென்ற அந்த இளைஞர், சிறிது நேரத்திலேயே தனது கூட்டாளிகள் ஆறு பேருடன் மீண்டும் உணவகத்திற்குத் திரும்பினார். அவர்கள் மறைத்து வைத்திருந்த கட்டைகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு உணவக ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..! pic.twitter.com/e3CHSpBNOH

— JAGANNATHAN (@Jaganathan_JPM) April 28, 2026

">

குறிப்பாக, உணவு தயாரிக்கும் மாஸ்டரான ஆரூன் என்பவரை அந்தக் கும்பல் குறிவைத்துத் தாக்கியது. இதில் ஆரூனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிய வழிய அவர் அலறியும், சற்றும் இரக்கமின்றி அந்தக் கும்பல் அவரை மீண்டும் மீண்டும் தாக்கியது. அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தடுக்க முயன்றும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்தக் கும்பல் வன்முறையைத் தொடர்ந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

வெளியான சிசிடிவி: அதிர்ச்சியில் பொதுமக்கள்

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் முழுப் பின்னணியும் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரத்தம் சொட்டச் சொட்ட ஊழியர் தாக்கப்படும் காட்சிகளும், அந்தக் கும்பலின் ரவுடித்தனமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது.

காவல்துறையின் மெத்தனப்போக்கு? - சர்ச்சையும் குற்றச்சாட்டுகளும்

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் என்பது 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு உள்ள ஒரு முக்கியப் பகுதி. இவ்வளவு பாதுகாப்பு நிறைந்த இடத்தில், ஒரு கும்பல் புகுந்து ரத்தவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளில் ஆறு பேர் தாக்கும் காட்சிகள் தெளிவாக உள்ள நிலையில், காவல்துறையினர் அரவிந்த் என்பவரை மட்டும் பிரதானமாகச் சேர்த்து, மொத்தம் இருவர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மீதமுள்ள நபர்களைக் கைது செய்யாமல் இருப்பதும், வழக்கை நீர்த்துப்போகச் செய்வதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உணவக உரிமையாளர்கள் கோரிக்கை

"உணவு கேட்டு வரும் நபர்களுக்குச் சேவை செய்யும் ஊழியர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்" எனப் பகுதி உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தப்பியோடிய மற்ற நபர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இருப்பினும், முக்கியக் குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது மயிலாடுதுறை வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
Tamilnadu Round Up: சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
Embed widget