மேலும் அறிய

சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளிக்குச் சென்ற 8-ம் வகுப்பு மாணவன், அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் மோதிய விபத்தில், எட்டாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த மற்றொரு மாணவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

விபத்து நடந்தது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு காவல் எல்லைக்குட்பட்ட தென்னாம்பட்டினம் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மகன் ஸ்ரீகாந்த் (13). இவர் கோனையாம்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காலை வழக்கம் போல பள்ளிக்குச் செல்வதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பனும் 7-ம் வகுப்பு மாணவனுமான பிரசன்னா (12) என்பவருடன் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். 

இருவரும் தென்னாம்பட்டினம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் மிக அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒரு தண்ணீர் டேங்கர் ஏற்றிய டிராக்டர் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக அந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் சென்ற சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்

இந்த கோர விபத்தில் டிராக்டரின் சக்கரம் ஸ்ரீகாந்தின் உடல் மீது ஏறியதில், உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த பிரசன்னா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விபத்து நடந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகப் பொதுமக்கள் 108 அவசர ஊர்திக்குத் தகவல் அளித்தனர். படுகாயமடைந்த மாணவன் பிரசன்னாவை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை மற்றும் கைது

தகவல் அறிந்து திருவெண்காடு காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மாணவன் ஸ்ரீகாந்தின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோட முயன்ற டிராக்டர் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, விபத்துக்குள்ளான டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

பள்ளிக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பும் முன்பே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தென்னாம்பட்டினம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீகாந்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.

பொதுமக்கள் கோரிக்கை

இப்பகுதியில் கிராமப்புறச் சாலைகளில் குடிநீர் கொண்டு செல்லும் டிராக்டர்கள் மற்றும் கனரக வாகனங்கள் மிக அதிவேகமாகச் செல்வதே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிப் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிச் சீருடையுடன் மாணவன் உயிரிழந்த இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
" சொத்துக்காக விஷ ஊசி போட்டு கொலை " மாரடைப்பு என நாடகம் !! இறுதியில் நடந்த சோகம்
பணம் வாங்கிய வீடியோ வைரல்: தவெக பிரமுகருக்கு நேர்ந்த கதி.. அதிரடி காட்டிய போலீசார்!
பணம் வாங்கிய வீடியோ வைரல்: தவெக பிரமுகருக்கு நேர்ந்த கதி.. அதிரடி காட்டிய போலீசார்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
Embed widget