மேலும் அறிய

Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை

தூக்கில் தொங்கியவரை மீட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து காவலர்கள் சுதாரித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது உண்மை வெளிவந்தது.

சென்னை, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை அருகே உள்ள ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (47) . கட்டட மேஸ்திரியான இவருக்கு பெரியநாயகி (38) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இச்சூழலில் நேற்று முன்தினம் (செப்.26) காலை 8 மணி அளவில் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்ற நிலையில், ஜெயபால் மட்டும் வீட்டில் மது அருந்திவிட்டு தனியாக இருந்து உள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் இருவரும் வெகு நேரமாக கூப்பிட்டும் ஜெயபால் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தபோது ஜெயபால் ஹாலில் புடவையால் தூக்கில் கொண்டிருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ந்துள்ளனர்.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலைக் கீழே இறக்கி கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் காவலர்கள் ஜெயபாலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது ஜெயபாலின் இடது கண் மற்றும் தொடைப் பகுதிகளில் லேசான காயம் இருந்ததை கவனித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டநிலையில், ஜெயபாலின் கழுத்தின் அருகே இருந்த காயங்களைக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மற்றும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான காவலர்கள் தற்கொலை வழக்கை தீவிரமாக விசாரித்தனர்.

அவர், தூக்கில் தொங்கியபோது முதலில் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் (40), கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து காவலர்கள் சுதாரித்து தீவிர கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், ஜெயபால் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது தெரிய வந்தது. ஜெயபாலின் பக்கத்து வீட்டுக்காரரான ஆறுமுகம் என்பவரும் கட்டட மேஸ்திரி வேலை செய்து வந்த நிலையில், ஆறுமுகத்தை விட ஜெயபால் கூலி குறைவாக வாங்கி வந்துள்ளார். இதனால் பெரும்பாலான வேலைகள் ஜெயபாலுக்கு கிடைத்ததை அடுத்து ஆத்திரமடைந்த ஆறுமுகம், மது போதையில் ஜெயபால் வீட்டுக்குச் சென்று கைகளாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். 

தொடர்ந்து அவரை வீட்டில் இருந்த புடவையால் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டது போன்று செட்அப் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் இந்தக் கொலையில் ஆறுமுகத்துக்கு உறுதுணையாக இருந்தாரா இல்லையா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறுமுகம், ரமேஷ் ஆகிய இருவரிடமும் கொடுங்கையூர் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget