மேலும் அறிய

Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை

தூக்கில் தொங்கியவரை மீட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து காவலர்கள் சுதாரித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது உண்மை வெளிவந்தது.

சென்னை, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை அருகே உள்ள ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (47) . கட்டட மேஸ்திரியான இவருக்கு பெரியநாயகி (38) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இச்சூழலில் நேற்று முன்தினம் (செப்.26) காலை 8 மணி அளவில் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்ற நிலையில், ஜெயபால் மட்டும் வீட்டில் மது அருந்திவிட்டு தனியாக இருந்து உள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் இருவரும் வெகு நேரமாக கூப்பிட்டும் ஜெயபால் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தபோது ஜெயபால் ஹாலில் புடவையால் தூக்கில் கொண்டிருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ந்துள்ளனர்.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலைக் கீழே இறக்கி கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் காவலர்கள் ஜெயபாலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது ஜெயபாலின் இடது கண் மற்றும் தொடைப் பகுதிகளில் லேசான காயம் இருந்ததை கவனித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டநிலையில், ஜெயபாலின் கழுத்தின் அருகே இருந்த காயங்களைக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மற்றும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான காவலர்கள் தற்கொலை வழக்கை தீவிரமாக விசாரித்தனர்.

அவர், தூக்கில் தொங்கியபோது முதலில் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் (40), கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து காவலர்கள் சுதாரித்து தீவிர கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், ஜெயபால் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது தெரிய வந்தது. ஜெயபாலின் பக்கத்து வீட்டுக்காரரான ஆறுமுகம் என்பவரும் கட்டட மேஸ்திரி வேலை செய்து வந்த நிலையில், ஆறுமுகத்தை விட ஜெயபால் கூலி குறைவாக வாங்கி வந்துள்ளார். இதனால் பெரும்பாலான வேலைகள் ஜெயபாலுக்கு கிடைத்ததை அடுத்து ஆத்திரமடைந்த ஆறுமுகம், மது போதையில் ஜெயபால் வீட்டுக்குச் சென்று கைகளாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். 

தொடர்ந்து அவரை வீட்டில் இருந்த புடவையால் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டது போன்று செட்அப் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் இந்தக் கொலையில் ஆறுமுகத்துக்கு உறுதுணையாக இருந்தாரா இல்லையா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறுமுகம், ரமேஷ் ஆகிய இருவரிடமும் கொடுங்கையூர் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget