மேலும் அறிய

Crime: சென்னை : சந்தேகப் பேயால் விபரீதம்.. காதல் மனைவியை அருவிக்கு அழைத்துச்சென்ற கணவர் செய்த பயங்கரம்..

தமிழ்செல்வி மதன் என்பவரை வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்டார். 3 மாதங்கள் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் தம்பதியினர் இடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

சென்னை அருகே சந்தேகத்தால் காதல் மனைவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி பால்கிஸ் உடன் வசித்து வருகிறார். இவரது 18 வயது மகள் தமிழ்செல்வி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்த மெக்கானிக் மதன் என்பவரை வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்டார். 3 மாதங்கள் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் தம்பதியினர் இடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனிடையே ஜூன் 23 ஆம் தேதி தமிழ்செல்வி மாயமானார். இதுகுறித்து தகவல் தெரிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மதனிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மனைவி வேறு ஒருவருடன் சென்று விட்டதாக மதன் கூறியுள்ளதோடு தொடர்ந்து மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்செல்வியின் பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என கூறி புகாரளித்த நிலையில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தனர்.

இதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், மதனின் நண்பர்கள் மூலம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி அவர் தமிழ்செல்வியை அழைத்துக் கொண்டு  ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள கைலாசா கோனே அருவிக்கு சென்றது தெரியவந்தது.  இதனையடுத்து தமிழ்செல்வி புகைப்படத்துடன் ஆந்திராவின் நாராயணவனம் டவுண் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அருவிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 26-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தமிழ்செல்வியுடன் செல்லும் மதன், திரும்பி வரும்போது தனியாக வந்ததை உறுதி செய்தனர். 

உடனடியாக அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் திருமணமான சில நாட்களிலேயே தனது நண்பர்களுடன் பேசிய தமிழ்செல்வி மீது மதன் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதோடு மனைவியை அடித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மதன் கோனே அருவிக்கு தமிழ் செல்வியை கூட்டிச்சென்ற இடத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கும்போது ஆத்திரமடைந்த மதன் தமிழ்செல்வியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகிலுள்ள முட்புதரில் தள்ளிவிட்டு வந்துவிட்டதாக மதன் கூறியுள்ளார். 

இதன்பின் மதனை அழைத்துக் கொண்டு கோனே அருவிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவர் அடையாளம் காட்டிய பகுதியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தேடியும் தமிழ்செல்வி உடல் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மதனின் நண்பர்களான பந்தா, சந்தோஷ் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரு மாநில காவல்துறையும் தமிழ்செல்வி என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா, இல்லை என்றால் அவரது உடல் எங்கே என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழம்பியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget