மேலும் அறிய

Crime: லிவ்-இன் கொடூரம்- முன்னாள் காதலி, 6 மாத குழந்தையின் கழுத்தறுத்து கொலை - கருக்கலைப்பால் விபரீதம்

Delhi Live in Murder: முன்னாள் காதலி மற்றும் அவரது தோழியின் 6 மாத குழந்தையை கொடூரமாக கொன்றதாக, டெல்லியில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Delhi Live in Murder: கருக்கலைப்பு விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொடூர கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைக் கொலை - குற்றவாளி கைது

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியை சேர்ந்த 23 வயதான நிகில் குமார் என்பவர், தனது முன்னாள் லிவ் - இன் பார்ட்னரான சோனல் ஆர்யா மற்றும் அவரது நண்பரின் 6 மாத குழந்தையை கொடூரமாக கொன்றதாக டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தனது முன்னாள் காதலி சோனல் ஆர்யா கருவுற்று இருந்ததாகவும், அதனை கலைக்க உதவிய அந்த பெண்ணின் நண்பரை பழிவாங்கும் விதமாகவே அவரது 6 மாத குழந்தையை நிகில் கொன்றதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 மாத குழந்தையை கொன்றது ஏன்?

காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சோனல் ஆர்யா எனும் பெண் ம் ஃபுட் டெலிவெரி ஏஜெண்டான நிகில் உடன் லிவ் -இன் ரிலேஷன்ஷிப்பில் டெல்லியின் மஜ்னு கா டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சோனல் பிரிந்து வந்து தனது தோழி ராஷ்மி தேவியின் வீட்டில் கடந்த சில வாரங்களாக வசித்து வந்துள்ளார். அதேநேரம், கருவுற்று இருந்த சோனல் அதனை கலைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு ராஷ்மி தேவியின் கணவர் உதவியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த நிகில் ஆத்திரமடைந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை கையிலெடுத்துக் கொண்டு, ராஷ்மி தேவியின் வீட்டிற்கு வந்து அவரது 6 மாத குழந்தையையும், தனது முன்னாள் காதலி சோனலையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்திற்காக குழந்தையை விற்ற நிகில்:

இதனிடையே, சோனல் மற்றும் நிகில் ஆகியோர் ஹல்த்வானி பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு சந்தித்ததாகவும், அவர்களுக்கு 2024ம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்ததும், அதனை பணத்திற்காக உள்ளூரிலேயே விற்றுவிட்டு, டெல்லி வசித்து வந்ததும்” காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தான், தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலி மற்றும் அவரது நண்பரின் 6 மாத குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்த நிகிலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

”மிருகத்தனமான செயல்பாடு”

இதுதொடர்பாக பேசிய சோனலின் சகோதரி, ”நிகில் குமார் எனது சகோதரியை மிகவும் சித்தரவதை செய்தார். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அடிப்பது, சத்தம் போடுவது என மோசமாக நடந்து கொண்டார். அவரை விட்டு விலகி செல்லவும் அனுமதிக்காமல் எனது தங்கையை மிரட்டினார். இதனை பொறுக்க முடியாமல் கடந்த ஜனவரி மாதம் அவரிடமிருந்து ஒருவழியாக சோனல் பிரிந்து வந்தார். தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நிகில் தவறாக பகிர்ந்து வந்ததால் உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார்” என தெரிவித்துள்ளார். முன்னதாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றபோது கூட அடிக்கடி தொலைபேசியில் அழைத்து மிகவும் மோசமாக பேசுவது, திட்டுவது, மிரட்டுவது என மிருகத்தனமாக நடந்து கொள்வார் என்றும் சோனலின் குடும்பத்தினர் நிகில் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
Embed widget