மேலும் அறிய
சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.. ஏரோ பிரிட்ஜில் மயங்கி விழுந்து பயணி உயிரிழப்பு..
" சொந்த ஊர் திரும்புவதற்காக, விமானத்தில் சென்னை வந்தவர், சென்னை விமான நிலைய ஏரோ பிரிட்ஜில் மயங்கி விழுந்து உயிரிழப்பு "
![சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.. ஏரோ பிரிட்ஜில் மயங்கி விழுந்து பயணி உயிரிழப்பு.. man from Andhra Pradesh electrical engineer in South Africa return to his hometown, and died after fainting at the aero bridge of the Chennai airport சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.. ஏரோ பிரிட்ஜில் மயங்கி விழுந்து பயணி உயிரிழப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/25/e9c4c5078565a47af15526de1f5c1cc0_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை சர்வதேச விமான நிலையம்
தென் ஆப்பிரிக்காவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர், சொந்த ஊர் திரும்புவதற்காக, விமானத்தில் சென்னை வந்தவர், சென்னை விமான நிலைய ஏரோ பிரிட்ஜில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்
சென்னை சர்வதேச விமான நிலையம் ( chennai international airport )
சென்னை ( Chennai News ) : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாலமோன் மாட்டின் லூதர் (47). இவர் தென்னாப்பிரிக்கா நாட்டில், தனியார் நிறுவனம் ஒன்றில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சாலமோன் மார்ட்டின் லூதர், தனது சொந்த ஊர் திரும்புவதற்காக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்தவர், இன்று மதியம் மும்பையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில், சென்னை வந்து, அங்கிருந்து சொந்த ஊரான சித்தூர் செல்ல முடிவு செய்து இருந்தார்.
அதன்படி சாலமோன் மார்ட்டின் லூதர், மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். விமானத்தில் இருந்து வெளியில் வந்தவர், ஏரோ பிரிட்ஜ் வழியாக, தரை தளத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை அடுத்து சக பயணிகள் பரபரப்படைந்து, உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிர் இழந்திருந்தார். இதையடுத்து மருத்துவக் குழுவினர், திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் சாலமோன் மாட்டின் லூதர் உயிரிழந்ததாக அறிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார், இன்று பிற்பகல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு, விரைந்து வந்து, சாலமோன் மார்ட்டின் லூதர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். தென்னாப்பிரிக்காவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றிய, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர், சொந்த ஊர் திரும்புவதற்காக, தென்னாபிரிக்காவில் இருந்து மும்பை வழியாக சென்னை வந்தவர், விமான நிலைய ஏரோ பிரிட்ஜில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion