மேலும் அறிய

அய்யய்யோ.. ஜோதிடத்தின் மீது தீராத நம்பிக்கை.. 2 பேர் தலை துண்டித்துக் கொலை

சத்ரபதி சிங் என்பவர் தனது வீட்டில் நடைபெறும் பூஜைக்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் பூல் குமாரி சிங் மற்றும் கெம்லா சிங் என்ற தம்பதியினரை அழைத்துள்ளார். நம்பி சென்ற அவர்களை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆன்மிகத்தின் மீது கொண்ட அதிக நாட்டம் காரணமாக 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அங்குள்ள அதர்வா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு வசிக்கும் சத்ரபதி சிங் என்பவர் தனது வீட்டில் நடைபெறும் பூஜைக்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் பூல் குமாரி சிங் மற்றும் கெம்லா சிங் என்ற தம்பதியினரை அழைத்துள்ளார். பூஜைக்காக தனது வீட்டின் வாசல் பகுதியில் ஒரு மண் மேடை ஒன்றை சத்ரபதி சிங் உருவாக்கினார். தொடர்ந்து நேற்று காலை பூஜைக்காக அண்டை வீட்டார் தம்பதியினர் இருவரும் வந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருவரையும் சத்ரபதி கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால்  பூல் குமாரி சிங் மற்றும் கெம்லா சிங் ஆகிய இருவரையும் தலை துண்டித்து சத்ரபதி சிங் கொலை செய்தார். அவர்கள் தாக்கப்படும்போது எழுந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சுமித்ரா சிங் மற்றும் ரம்பஜன் சிங் ஆகிய இரண்டு பேர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சத்ரபதி சிங்கை கைது செய்து விசாரணை நடத்தினர். அதுமட்டுமல்லாமல் அவர் வீட்டில் நடத்திய விசாரணையில் சூனியம் போன்ற சடங்குகளுக்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சத்ரபதி சிங்கும், இந்த நிகழ்வில் கொலை செய்யப்பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் ஆகியோர் உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 

மேலும் முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் சத்ரபதி சிங் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அவர் ஜோதிடம் பார்த்தபோது அதில் இது தெய்வத்தின் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனவும், அதனை சரி செய்ய ஒரு சடங்கு செய்து நரபலி கொடுக்க வேண்டும் என சொன்னதாகவும் தெரிய வந்தது. அதனை நம்பிய சத்ரபதி சிங் திட்டமிட்டபடி பூல் குமாரி சிங் மற்றும் கெம்லா சிங் ஆகியோரை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தடயவியல் குழுவால் மீட்கப்பட்ட ஒரு தேங்காய் மற்றும் பிற பூஜை பொருட்கள் ஆகியவை சோதனைக்கு உட்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சத்ரபதி சிங் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் அவரது சமீபகால  நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
IPL 2026 PBKS vs GT: ஆட்டம் காட்டிய வெற்றி.. பஞ்சாப்பிற்கு பலே பலே! கடைசி ஓவரில் தோற்ற குஜராத்!
IPL 2026 PBKS vs GT: ஆட்டம் காட்டிய வெற்றி.. பஞ்சாப்பிற்கு பலே பலே! கடைசி ஓவரில் தோற்ற குஜராத்!
நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?
நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !
மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Embed widget