மேலும் அறிய

Crime: 18+ படம் பார்ப்பியா? ஆத்திரத்தில் மகனுக்கு விஷம் வைத்து கொன்ற தந்தை - மகாராஷ்ராவில் பயங்கரம்!

மகாராஷ்டிராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்ததற்காக 14 வயது சிறுவனுக்கு அவரது தந்தை விஷம் கொடுத்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவர் அதே பகுதியில் தையல் வேலை பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி கீர்த்தி. இந்த தம்பதிக்கு 14 வயதில் விஷால் என்ற மகன் உள்ளார்.  இந்த நிலையில், 14 வயது சிறுவன் விஷால் படிக்காமல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்து வந்துள்ளார்.

மகனை கொன்ற தந்தை:

இதனை அறிந்த அவரது தந்தை விஜய்,  மகனிடம் பலமுறை இந்த படங்களை எல்லாம் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. இருப்பினும், அந்த  சிறுவன் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்து வந்துள்ளார். 

இதற்கிடையில், ஜனவரி 13ஆம் தேதி தனது மகன் காணவில்லை என்று விஜய் மற்றும் அவரது மனைவி கீர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, இவர்களது  வீட்டிற்கு அருகில் இருக்கும் கால்வாயில் சிறுவன் விஷாலின் உடலை போலீசார் மீட்டனர். 

இதனை அடுத்து, சிறுவனின் உடலை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சிறுவனின்  உடலில் சோடியம் நைட்ரேட் என்ற விஷம் இருப்பது தெரியவந்தது. இதனால், சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.  இதன்படியே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கால்வாயில் வீசிய கொடூரம்:

அப்போது, கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை விஜய்யிடம் போலீசார் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணமாக பதிலளித்துள்ளார்.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தவே தனது மகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் விஜய்.  அவர் வாக்குமூலத்தின்படி, தனது மகன் விஷால் படிக்காமல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்து வந்துள்ளார்.

அதிலேயே அடியாகி உள்ளார். இதுகுறித்து பலமுறை கண்டித்திருக்கிறேன். ஆனால், தனது மகன் கேட்கவில்லை. இதனால், ஜனவரி 13ஆம் தேதி அன்று காலை தனது மகனை, பைக்கில் அழைத்து சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து அவருக்கு கொடுத்தேன்.

இதனால், சுயநினைவை இழந்த தனது மகனை கால்வாயில் வீசி உள்ளேன் என்று தெரிவித்தார். இதனை அடுத்து, போலீசார் குற்றவாளியான விஜய்யை கைது செய்து, ஜனவரி 29ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவருக்கு 14 நாட்ககள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படத்தை பார்த்ததால், ஆத்திரத்தில் 14 வயது சிறுவனை, அவரது தந்தையே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க

Crime: முன்பகை! ஆள் மாற்றி திருநங்கையை கொலை செய்த இளைஞர் - நடந்தது என்ன?

Crime: மகளுக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் கைதான தந்தை.. திருவண்ணாமலையில் பயங்கரம்

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
Aadi Amman Temples Tour : ரொம்ப கம்மியான கட்டணம்.! ஆடி அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா- முன்பதிவு செய்ய TTDC அழைப்பு
ரொம்ப கம்மியான கட்டணம்.! ஆடி அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா- முன்பதிவு செய்ய TTDC அழைப்பு
Embed widget