மேலும் அறிய

Crime: 16 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை.. பீட்சா கடை ஓனர்.. தன் வாயால் மாட்டிக்கொண்ட மாஃபியா கும்பல் தலைவன்.. நடந்தது என்ன?

பிரான்ஸில் உள்ள பீட்சா கடையில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இத்தாலியின் மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைவன் வேலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸில் உள்ள பீட்சா கடையில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இத்தாலியின் மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைவன் வேலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், அதிலிருந்து தப்பிக்க தனது அடையாளங்களை மறைத்து தலைமறைவாக வாழ்வார்கள். அப்படிப்பட்டவர்கள் என்றைக்காவது ஒருநாள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொள்வார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் பிரான்ஸில் நடைபெற்றுள்ளது. 

பாரிஸ் மற்றும் இத்தாலி நாட்டில் கொலை, போதைப்பொருள், ஆட்கடத்தல், சூதாட்டம் என பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட எட்ஹர்டொ கிரிகொ என்பவர் மிகப்பெரிய மாபியா கும்பலான டிரன்ங்ஹிடாவின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். 63 வயதான அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஒரு பிரச்சினையில்  எதிர் தரப்பைச் சேர்ந்த 2 பேரை அடித்து கொலை செய்ததோடு உடலை ஆசிட் ஊற்றி சிதைத்ததாக கிரிகொ மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எட்ஹர்டொ கிரிகொ தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு இயலவில்லை. 

கிட்டதட்ட கடந்த 16 ஆண்டுகளாக இண்டர்போல் உதவியுடன்  இத்தாலி போலீசார், உளவுத்துறையினர்  எட்ஹர்டொ கிரிகொவை தேடி வந்தனர். ஆனாலும் அவர்களின் கண்ணில் சிக்காமல் கிரிகொ தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இத்தாலி  மாஃபியா கும்பல் தலைவன் கிரிகொ பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். இண்டர்போல் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தன்னுடைய பேட்டி ஒன்றே தனக்கெதிராக மாறும் என கிரிகொ நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். 

பிடிபட்டது எப்படி? 

2006 ஆம் ஆண்டு கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவான கிரிகொ இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு நுழைந்துள்ளார். அங்கு தனது பெயரை பொலோ டிமிட்ரியோ என்று மாற்றிக் கொண்டு பிரான்ஸின் பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்களில் பீட்சா செய்யும் சமையல்காரராக வேலை செய்துள்ளார். 

அதன்மூலம் கிடைத்த தொடர்புகளை பயன்படுத்தி பிரான்ஸின் செயிண்ட் இடினி நகரில் சக நண்பர் ஒருவருடன் சேர்ந்து சொந்தமாக பீட்சா கடை தொடங்கியுள்ளார். மேலும் தனது உணவகத்தை பிரபலப்படுத்த கெரிகோ நினைத்துள்ளார். அதன்படி உள்ளூர் டிவிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். செய்தித்தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. 

தன்னை எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்த கிரிகொ டிவி பேட்டியின்போது தான் இத்தாலியை பூர்வீகமாக கொண்டவன் என பெருமையாக கூறியுள்ளார். அப்போது இத்தாலியை சேர்ந்த ஒரு குற்றவாளியின் பெயரையும் அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்த தகவல்கள் இண்டர்போல் வசம் சென்ற நிலையில் பிரான்ஸ், இத்தாலி போலீசார் ரகசியமாக விசாரனை மேற்கொண்டனர். இதில் 16 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் தலைமறைவான கிரிகொ தான்  பீட்சா கடை நடத்தி வருவது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Best 125cc Bikes in India: சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Embed widget