மேலும் அறிய

திருப்பூரில் அரங்கேறிய மதுரை சம்பவம்... பழிக்குப் பழியாக 5வது கொலை: ’சுப்ரமணியபுரம்’ பாணியில் ஸ்கெட்ச்!

விக்னேஷ் கொலையாவதற்கு அவரது நண்பர் எதிரிக் கும்பலிடம் அவரைக் காட்டிக்கொடுத்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. 

திருப்பூர் மாவட்டம் திருமலை பாளையம் அருகே புதன்கிழமை நள்ளிரவில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரதை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ்  இவர் தாராபுரம் அருகே உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம்  பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் ஒன்றில் உள்ள காலி மனை இடத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலங்கியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் தனராசு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கினர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் விக்னேஷ் எதற்கு மதுரையிலிருந்து திருமலை பகுதிக்கு வந்தார் எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்தும். சம்பவ இடத்தில் கிடந்த கத்தி, வீச்சுவாள் . வாகனங்கள் பழுது பார்க்கும் சிறிய ராடு கம்பி ஆகிய தடயங்களை கைப்பற்றி எடுத்து வைத்துள்ளனர் மேலும் திருப்பூரிலிருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து  கொலையாளி விட்டு சென்ற தடயங்கள் உள்ளனவா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


திருப்பூரில் அரங்கேறிய மதுரை சம்பவம்... பழிக்குப் பழியாக 5வது கொலை: ’சுப்ரமணியபுரம்’ பாணியில் ஸ்கெட்ச்!

விக்னேஷின் உடலை போலீசார் கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனை வைத்தும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.  ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பழிக்குபழியாக நடந்த ஐந்தாவது கொலை எனச் சொல்லப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் விருதுநகரைச் சேர்ந்த விமல், மனோஜ், செல்வன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் இந்தக் கொலை தொடர்பாக மேலதிகமாக இருவர் சரணடைந்த நிலையில் மூவரை போலீசார் தேடி வருகின்றனர். 

விசாரணை குறித்து போலீசார் கூறுகையில்,’விக்னேஷின் அண்ணன் சேர்மராஜ் மற்றும் முத்து காமாட்சி. விக்னேஷ் தரப்புக்கும் சங்கர் என்பவர் தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதில் 2018ல் சங்கர் தரப்பைச் சேர்ந்த சுகன் என்பவரின் கைகால்களை சங்கர் தரப்பினர் வெட்டினார்கள்.


திருப்பூரில் அரங்கேறிய மதுரை சம்பவம்... பழிக்குப் பழியாக 5வது கொலை: ’சுப்ரமணியபுரம்’ பாணியில் ஸ்கெட்ச்!

இதற்கு பழிவாங்க, சங்கர் தரப்பினர் விக்னேஷின் அண்ணன் முத்து காமாட்சியை அதே ஆண்டு மே மாதம் கொலை செய்தனர். இதற்கு பதிலடியாக சங்கரை விக்னேஷ் தரப்பினர் செப்டம்பர் மாதம் கொலை செய்துள்ளனர். சங்கர் தரப்பினர் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் விக்னேஷ் தரப்பை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவரை கொலை செய்தனர். இதில் முத்து காமாட்சி கொலையில் கைதான அதிமுகவைச் சேர்ந்த சண்முக ராஜாவை விக்னேஷ் தரப்பினர் வெட்டிக் கொன்றனர். இதற்கிடையே விக்னேஷுக்கு மதுரையில் வேறொரு கும்பலுண்ட முன் விரோதம் இருந்துள்ளது. அவர்கள்தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விக்னேஷை கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது’ எனத் தெரிவித்தனர்  விக்னேஷ் கொலையாவதற்கு அவரது நண்பர் எதிரிக் கும்பலிடம் அவரைக் காட்டிக்கொடுத்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. 
சுப்ரமணியபுரம் திரைப்படக் கிளைமாக்ஸ் பாணியில் அரங்கேறியுள்ள இந்த தொடர் கொலையால் தாராபுரம் மக்கள் திகிலடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget