மேலும் அறிய

Crime: திருப்பூரில் அதிர்ச்சி.. எதிர்ப்பை மீறி திருமணம்.. தீராத பயம்.. 10 நாட்களில் காதல் ஜோடி தற்கொலை.. நடந்தது என்ன?

20 வயது இளைஞரும், மைனர் பெண்ணும் அண்ணன் - தங்கை உறவு முறை என சொல்லப்படுகிறது. இதனால் காதலுக்கு இருவரது வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

திருப்பூரில் திருமணமான 10 நாட்களில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்த இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இளைஞனுக்கு 20 வயதும், சிறுமி 18-வயது நிரம்பாதவராக இருந்த நிலையில் இருவரும் அண்ணன் - தங்கை உறவு முறை என சொல்லப்படுகிறது. இதனால் காதலுக்கு இருவரது வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிந்துபட்டி போலீசில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் இளைஞரும், மைனர் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் திருமணம் செய்துகொண்டு திருப்பூருக்கு சென்றுள்ளனர். 

அங்கு செரங்காடு கடுகுகாரர் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அங்கு கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதனிடையே நேற்று காலை அக்கம்பக்கத்தினர் தண்ணீர் பிடிப்பதற்காக இவர்கள் வசித்த வீட்டுக்கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் எவ்வித பதிலும் வராததாலும், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாலும் அவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்துள்ளனர். 

அப்போது இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றதாக கூறப்படுகிறது. அதில் திருப்பூரில் இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்து பிடித்துவிட்டதால் எப்படியும் பிரித்து விடுவார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. 

அதேசமயம் எங்கள் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டோம். ஆனால் முடியவில்லை. எங்கள் தற்கொலை முடிவுக்கு சிலர்தான் காரணம். 100 வருடம் சந்தோஷமாக வாழ ஆசைப்பட்ட நாங்கள், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget