மேலும் அறிய

Crime: நிலத்தகராறு பிரச்சினை.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை.. பெரும் பதற்றம்..

உத்தரப்பிரதேசத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் உள்ள பதேபூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் பிரேம் யாதவ் . இவர் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் ஆக இருந்தவர். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சத்யபிரகாஷ் துபே என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. அப்படியான பிரச்சினை நேற்று காலையும் நீண்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு சத்ய பிரகாஷ் துபே வீட்டுக்கு பிரேம் யாதவ் சென்றுள்ளார். முதலில் சமாதான பேச்சு ஆரம்பித்த நிலையில் அது ஒரு கட்டத்தில் வாக்குவதமாக முற்றியது. 

இருவரையும் சமாதானம் செய்ய சத்ய பிரகாஷ் துபே குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் தகராறு முற்றவே, பிரேம் யாதவை சத்ய பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூர்மையான ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

உடனடியாக கொலை பற்றி அறிந்தவுடன் பிரேம் யாதவ் ஆதரவாளர்களான பதேபூர் பகுதியைச் சேர்ந்த சிலர் நேராக சத்ய பிரகாஷ் துபே வீட்டுக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். நேராக அவர் மீதும், குடும்பத்தினர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் சத்ய பிரகாஷ் துபே, அவரது மனைவி கிரண் துபே, மகள்கள் சலோனி, நந்தினி, மகன் காந்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். மற்றொரு மகன் அன்மோல் படுகாயங்களுடன் கோரக்பூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அடுத்தடுத்து பதேபூர் கிராமத்தில் நடைபெற்ற 6 பேர் படுகொலையால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அகண்ட் பிரதாப் சிங், போலீஸ் சூப்பிரண்டு சங்கல்ப் சர்மா ஆகியோர் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுவரை கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
WhatsApp: வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
WhatsApp: வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
WhatsApp: வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
WhatsApp: வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
Embed widget