![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பர்கூர் அருகே நடந்த மர்ம சாவில் திடீர் திருப்பம் - தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் சரண்
காவல்துறையினர் விசாரணையில் எங்களை நெருங்குவதை உணர்ந்து நாங்களே சரணடைந்து விட்டோம்
![பர்கூர் அருகே நடந்த மர்ம சாவில் திடீர் திருப்பம் - தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் சரண் Krishnagiri: Relatives of a man who spoke ill of his sister, bought her alcohol and threw her out பர்கூர் அருகே நடந்த மர்ம சாவில் திடீர் திருப்பம் - தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் சரண்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/11/090ff67473d2c23942138f86f16f86ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (25) சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டிவந்த நிலையில், தொழிலில் நஷ்டம் அடைந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பட்லப்பள்ளியில் தனது அக்காவின் வீட்டில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் பர்கூர் அடுத்த தீர்த்தகிரிப்பட்டி ஏரியில் கடந்த 6ஆம் தேதி ராஜசேகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ராஜசேகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். ராஜசேகரின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில், செல்போன் டவர் சிக்னலை வைத்து அந்த நேரத்தில் ஏரிக்கு வந்தவர்களின் மொபைல் எண்களையும் காவல்துறையினர் எடுத்து விசாரித்தனர்.
இந்த நிலையில், காளிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசனிடம், ராஜசேகரை முன்விரோதத்தில் கொன்றதாக கூறி பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளியை சேர்ந்த திருப்பதி (30), திருப்பதியின் சித்தப்பா மகன் முருகன் (35) ஆகியோர் சரண் அடைந்தனர். இருவரும் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், நாங்களும், ராஜசேகரும் உறவினர்கள். எங்களது தங்கையை ராஜசேகரின் சொந்த ஊரான கந்திலியில் திருமணம் செய்து கொடுத்தோம். அவர் ராஜசேகரின் வீட்டின் அருகே குடியிருந்து வருகிறார். கொலை செய்யப்பட்ட ராஜசேகர் தன்னை ஆபாசமாக பேசி கிண்டல் செய்வதாக தங்கை எங்களிடம் கூறி அழுதார். இதனால் எங்களுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கந்திலியிலிருந்து பட்லப்பள்ளி வந்த ராஜசேகரை நோட்டமிட்டோம். கடந்த 5ஆம் தேதி இரவு அவரை கொலை செய்ய திட்டமிட்டோம் பின்னர் தீர்த்தகிரிப்பட்டி ஏரிக்கு ராஜசேகரை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தோம். நள்ளிரவு நேரத்தில் ராஜசேகரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டோம். பின்னர் நாங்கள் 2 நபர்களும் அங்கிருந்து தப்பித்துவிட்டோம். பின்னர் காவல்துறையினர் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்னினோம் ஆனால் காவல்துறையினர் விசாரணையில் எங்களை நெருங்குவதை உணர்ந்து நாங்களே சரணடைந்து விட்டோம் என கூறினர். இதையடுத்து திருப்பதி, முருகன் ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பர்கூர் அருகே ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்த 2 நபர்களையும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)