மேலும் அறிய

சென்னையில் நடந்த கொடூர கொலை.. கர்நாடகா போலீசை அலறவிட்ட பின்னணி இது ?

"சென்னை மறைமலைநகர் பகுதியில் கொலை செய்து விட்டு கர்நாடகா மாநிலத்தில் உடலை வீசிய கொலையாளிகள் "

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2011 -ஆம் ஆண்டு அழகுராஜின் அப்பா பழனியாண்டி என்பவரை முருகேசன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தலையில் மரக்கட்டையால் சராசரியாக அடித்துகொலை செய்துள்ளார். 

தொடர் முன்விரோதம்

தனது அப்பா சாவிற்கு காரணமான முருகேசன் மற்றும் அவரது சகோதரர் இருவர் மீதும் விரோதம் கொண்ட அழகுராஜ் முருகேசனின் தந்தை முத்துக்குமார் மற்றும் அவரது மனைவியை கத்தியால் தலையில் பதிலுக்கு வெட்டியுள்ளார். இதற்கு பழி வாங்கும் விதமாக முருகேசன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் அழகுராஜின் அண்ணன் ராஜசேகரை கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக வழக்கு சிவகங்கை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

தலைமறைவு வாழ்க்கை

இந்நிலையில் முருகேசன் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் சிவகங்கையை விட்டு தலைமறைவாகி வெவ்வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர். இதில் அழகுராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் தங்கி நெய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் அழகுராஜை கொலை செய்ய திட்டமிட்டு முருகேசன் பத்தாண்டுகளாக தே டிவந்துள்ளார்.

அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அழகுராஜ் தாம்பரம் ரெங்கநாதன் தெருவில் தங்கி நெய் வியாபாரம் செய்து வருவதை அறிந்து கொண்ட முருகேசன் கடந்த 21.11.2024 அன்று முருகேசனின் கூட்டாளிகளான அன்பரசு மற்றும் கதிர்வேல் ஆகியோர் உதவியோடு சிங்க பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த அழகு ராஜாவிடம் வியாபாரம் பேசுவதைப் போல் பேசியுள்ளார்.

திட்டம் திட்டி கொலை

அழகுராஜை அழைத்துச்சென்ற கதிர்வேல், அன்பரசு ஆகியோர் ஏற்கனவே தயார்நிலையில் காத்திருந்த முருகேசனின் இண்டிகா காரில் கடத்திச் சென்று மறைமலைநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் வைத்து அழகுராஜை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து அழகுராஜின் சடலத்தை காரிலயே கொண்டு சென்று ஓசூர் பகுதியில் ஒரு காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். மேலும் கர்நாடகா நீதிமன்றத்தில் இக்கொலை சம்பந்தமாக சரணடைந்துள்ளனர்‌.

இது சம்பந்தமாக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் குற்ற எண் 458/24u/s 103,238(A) BNS act வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கொலை செய்யப்பட்ட மறைமலைநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட அந்த சம்பவ இடத்தை கண்டறிவதற்காக கர்நாடகா போலீசார் மறைமலைநகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு இக்கொலை குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கொலை விவகாரம் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Embed widget