மேலும் அறிய

Raina's Uncle Killers Arrest: ரெய்னாவின் மாமா கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது!

விசாரணையின் போது, ​​கும்பலை சேர்ந்த பெண்கள் கொள்ளைக்கு முன்னர் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அவர்கள் செடிகளை விற்பதற்காக வீட்டிற்குள் நுழைந்து,  திருட திட்டமிட்ட கும்பலுக்கு உதவியுள்ளனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தினர் மீது பயங்கர தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் நடைபெற்ற கொள்ளையின் போது ரெய்னாவின் மாமா அசோக் குமார் கொல்லப்பட்டார் மற்றும் அவரது குடும்பத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குடும்பத்தினரை ஆயுதங்களால் அடித்து, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். 

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, ரெய்னா 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றிவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் காவல்துறை, உத்தரபிரதேச சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) உடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பஹேரி காவல் நிலையத்தின் கீழ் வரும் பச்ச்பேதா கிராமத்தைச் சேர்ந்த சஜ்ஜுவை நேற்று கைது கைது செய்யப்பட்டதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சத்யாசென் யாதவ் தெரிவித்தார்.  குற்றம் சாட்டப்பட்டவர் கொள்ளை மற்றும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு தான் ஹைதராபாத்திற்கு தப்பிச் சென்றதாகவும், சிறிது நேரம் அங்கேயே தங்கியிருந்ததாகவும், பின்னர் பரேலியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பியபோது சஜ்ஜு கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினார்கள்.


Raina's Uncle Killers Arrest: ரெய்னாவின் மாமா கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது!

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி அஜய் பால் சிங் கூறுகையில், உ.பி.யைச் சேர்ந்த சைமார் பழங்குடியினத்தைச் சேர்ந்த கொள்ளைக்காரர்களின் ஒரு கும்பலால் இந்த கொள்ளை நடந்துள்ளது. கொள்ளைக்கு திட்டமிட்ட சஜ்ஜு சைமார் பரேலியில் உள்ள பஹேடியைச் சேர்ந்தவர். அவர் குற்றத்தைச் செய்த பின்னர் ஹைதராபாத்தில் தலைமறைவாகிவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த கிராமமான பஹேதியில் உள்ள பச்பேடாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. நாங்கள் பஞ்சாப் போலீஸை எச்சரித்தோம், அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், ஒரு குழு ஞாயிற்றுக்கிழமை காலை கிராமத்தில் சோதனை நடத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று கூறினார்.

மேலும், “விசாரணையின் போது, ​​கும்பலை சேர்ந்த பெண்கள் கொள்ளைக்கு முன்னர் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அவர்கள் செடிகளை விற்பதற்காக வீட்டிற்குள் நுழைந்து,  திருட திட்டமிட்ட கும்பலுக்கு உதவியுள்ளனர். இந்த கும்பலின் செயல்முறையானது, பாதிக்கப்பட்டவர்களை இரக்கமின்றி அடிப்பதே ஆகும். கொள்ளைக்குப் பிறகு கும்பலைச் சேர்ந்தவர்கள் கலைந்து பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்” என்றும் கூறினார்.

Ajith 61 in Social Media: டிரெண்டாகும் #Thala61 ; போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்?

 

 

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Embed widget