மேலும் அறிய

Crime : கேரளாவில் மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று, போக்சோ வழக்கு குற்றவாளி தற்கொலை

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று கணவன் தற்கொலை

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே மனைவி மற்றும் மகளை எரித்து கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, மகள்கள்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா கிராமத்தைச் சேர்ந்தவர்  முகமது. அவருக்கு மனைவியின் 11 வயது மற்றும் 5 வயது உள்ளிட்ட மூன்று மகள்கள் உள்ளதாக கருதப்படுகிறது. முகமது 2020-ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்துள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:

போக்சோ வழக்கில் குற்றவாளியான முகமது, வியாழக்கிழமை அவரது மனைவி மற்றும் 11 வயது மகள் மற்றும் 5 வயது மகள் ஆகியோரை ஆட்டோ ரிக்சாவின் உள்ளே அமர்த்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அதையடுத்து முகம்மதுவும் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்,இந்நிலையில் அவரது மனைவி மற்றும் 11 வயது மகள் நெருப்பில் முற்றிலுமாக எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் 5 வயது  மகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின் சிறிது நேரத்திற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆட்டோ ரிக்சாவில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆட்டோ ரிக்சா முழுமையாக எரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : கேரளாவில் மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று, போக்சோ வழக்கு குற்றவாளி தற்கொலை

சம்பவத்தை பார்த்தவர்கள்:

அக்கம் பக்கத்தினர் கூறுகையில், அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்ததில் ஆட்டோ ரிக்சா எரிவதை பார்த்தோம். அருகே சென்ற போது அதில் இருந்த முகமது திடீரென கிணற்றுள் குதித்து விட்டார். மேலும் ஆட்டோ ரிக்சாவின் அருகே செல்லும்போது திடீரென வெடித்தது.பின்னர் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தோம். ஆனால் அதற்குள் முகமது மனைவி மற்றும் அவரது மகள் நெருப்பில் எரிந்து உயிரிழந்தனர்.நெருப்பு எரிய ஆரம்பித்த போதே, 5 வயது மகளை ஆட்டோவிலிருந்து அவரது சகோதரி வெளியே தள்ளிவிட்டதால் அவர் உயிரோடு உள்ளார்.எனினும் காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.
Crime : கேரளாவில் மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று, போக்சோ வழக்கு குற்றவாளி தற்கொலை

காவல்துறை:

 சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் முகமது என்பவர் ஏற்கனவே  போக்சோ வழக்கில் கைது செய்ய்ப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். இவர் ஆட்டோ ரிக்சாவில்  3 பேரையும் அடைத்து பெட்ரோல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வைத்து நெருப்பு வைத்திருக்கலாம்.மேலும் ஆட்டோ ரிக்ஷாவில் வெடி பொருட்களையும் வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget