மேலும் அறிய

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ; 19 வருடங்களுக்குப் பின் Ai தொழில்நுட்பத்தால் சிக்கிய குற்றவாளிகள்

தாய், 2 குழந்தைகள் கொலையில் 19 ஆண்டுகளுக்குபின் 2 ராணுவ வீரர்கள் (AI technology) ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் கைது  செய்த சிபிஐ

புதுச்சேரி: கேரள மாநிலத்தில் தாய், 2 குழந்தைகள் கொலையில் 19 ஆண்டுகளுக்குபின் 2 ராணுவ வீரர்கள் (AI technology) ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் கைது செய்து சிபிஐ.

கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி ( வயது 24). இவருக்கு கடந்த 2006ல் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த 17வது நாள் ரஞ்சனியின் தாயார் பிறப்பு சான்றிதழ் பெற உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை குறித்து கேரள போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். 

அப்போது ராணுவத்தில் பணிபுரிந்த குமார் என்பவருக்கும் ரஞ்சனிக்கும் தொடர்பு ஏற்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் குமாரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்படி மகளிர் ஆணையம் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், மற்றொரு ராணுவ வீரரான கண்ணூரை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் குமார் சேர்ந்து ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது. 

LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள்; ஒரே நாளில் ரூ.75 லட்சம்- அதிர்ஷ்டம் யாருக்கு?

தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர். அப்போது ராணுவத்தில் பணிபுரிந்த 2 பேரும் தலைமறைவாகினார். இவ்வழக்கில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாத நிலையில், கடந்த 2010ல் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் AI ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தலைமறைவாக இருந்த குமார், ராஜேஷ் ஆகியோரின் உருவப்படத்தை தயாரித்து அதனை வெளியிட்டும், இணையதளம் மூலமாகவும் தேடி வந்தனர். அப்போது அதே உருவம் கொண்ட 2 பேர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ் என்பவர் பிரதீப் எனவும், குமார் என்பவர் விஷ்ணு எனவும் பெயரை மாற்றிக் கொண்டு புதுச்சேரியில் திருமணம் செய்து குழந்தைகளுடன் சேதராப்பட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சொத்துக்களையும் வாங்கி உள்ளனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய், 2 குழந்தைகள் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்கு பின் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடித்த சம்பவம் மற்ற குற்றவாளிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget