மேலும் அறிய

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ; 19 வருடங்களுக்குப் பின் Ai தொழில்நுட்பத்தால் சிக்கிய குற்றவாளிகள்

தாய், 2 குழந்தைகள் கொலையில் 19 ஆண்டுகளுக்குபின் 2 ராணுவ வீரர்கள் (AI technology) ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் கைது  செய்த சிபிஐ

புதுச்சேரி: கேரள மாநிலத்தில் தாய், 2 குழந்தைகள் கொலையில் 19 ஆண்டுகளுக்குபின் 2 ராணுவ வீரர்கள் (AI technology) ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் கைது செய்து சிபிஐ.

கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி ( வயது 24). இவருக்கு கடந்த 2006ல் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த 17வது நாள் ரஞ்சனியின் தாயார் பிறப்பு சான்றிதழ் பெற உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை குறித்து கேரள போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். 

அப்போது ராணுவத்தில் பணிபுரிந்த குமார் என்பவருக்கும் ரஞ்சனிக்கும் தொடர்பு ஏற்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் குமாரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்படி மகளிர் ஆணையம் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், மற்றொரு ராணுவ வீரரான கண்ணூரை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் குமார் சேர்ந்து ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது. 

LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள்; ஒரே நாளில் ரூ.75 லட்சம்- அதிர்ஷ்டம் யாருக்கு?

தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர். அப்போது ராணுவத்தில் பணிபுரிந்த 2 பேரும் தலைமறைவாகினார். இவ்வழக்கில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாத நிலையில், கடந்த 2010ல் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் AI ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தலைமறைவாக இருந்த குமார், ராஜேஷ் ஆகியோரின் உருவப்படத்தை தயாரித்து அதனை வெளியிட்டும், இணையதளம் மூலமாகவும் தேடி வந்தனர். அப்போது அதே உருவம் கொண்ட 2 பேர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ் என்பவர் பிரதீப் எனவும், குமார் என்பவர் விஷ்ணு எனவும் பெயரை மாற்றிக் கொண்டு புதுச்சேரியில் திருமணம் செய்து குழந்தைகளுடன் சேதராப்பட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சொத்துக்களையும் வாங்கி உள்ளனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய், 2 குழந்தைகள் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்கு பின் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடித்த சம்பவம் மற்ற குற்றவாளிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget