மேலும் அறிய

புரோக்கர்களின் ஆதிக்கத்தில் கரூர் சார் பதிவாளர் அலுவலகங்கள் - பொதுமக்கள் புகார்

புரோக்கர்கள் நடமாட்டம் குறித்து திருச்சி மாவட்டம், பதிவுத்துறை துணைத் தலைவர் கரூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

கரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் புரோக்கர்களின் பிடியில் சிக்கி உள்ளன. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரில் மாநகராட்சி அலுவலகம் அருகே மேல கரூர் சார்பதிவாளர் அலுவலகம் கரூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் -2 அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்து பகுதிகளில் இருந்து சொத்துக்கள் வாங்கல் விற்பனை செய்ய பத்திரப்பதிவு பணிக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர்.



புரோக்கர்களின் ஆதிக்கத்தில் கரூர் சார் பதிவாளர் அலுவலகங்கள் - பொதுமக்கள் புகார்

சமீபகாலமாக இந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் பத்திரப்பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில் கமிஷன் கொடுத்தால் தான், பத்திரப்பதிவு செய்வார்கள் எனக்கூறி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். புரோக்கர்கள் நடமாட்டம் குறித்து திருச்சி மாவட்டம், பதிவுத்துறை துணைத் தலைவர் கரூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது, கரூரில் உள்ள இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில், கமிஷன் கொடுத்தால் மட்டுமே பத்திரி பதிவு செய்யப்படுகிறது. இல்லை என்றால் 'சர்வர்' கோளாறு எனக்கூறி, பத்திரப்பதிவை தள்ளிப் போடுகின்றனர்.


புரோக்கர்களின் ஆதிக்கத்தில் கரூர் சார் பதிவாளர் அலுவலகங்கள் - பொதுமக்கள் புகார்

பத்திரப்பதிவு செய்ய டோக்கன் பெறுவதற்கு கூட கமிஷன் கொடுத்தால் தான் கிடைக்கிறது. ஆவண எழுத்தர்கள் எனக் கூறிக்கொண்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள்தான் நாள்தோறும் நடக்கும் பத்திர பதிவை நிர்ணயம் செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும், சார் பதிவாளர் முதல் அலுவலக ஊழியர்கள் பணம் தரவேண்டும் என, ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கேட்கின்றனர்.


புரோக்கர்களின் ஆதிக்கத்தில் கரூர் சார் பதிவாளர் அலுவலகங்கள் - பொதுமக்கள் புகார்

இதனால் ஆவண எழுத்தார்களுக்கான தொகையை பத்திரப்பதிவுத்துறை மூலம், தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஆவண எழுத்தர்கள் அல்லாத சார்பதிவாளர்கள் அலுவலக ஊழியர்கள் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடமாடும் புரோக்கர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடித்து, அரசு அலுவலர்கள் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget