![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கழிப்பறைக்குச் சென்ற புதுப்பெண் மாயம் - உறவினர்கள் அதிர்ச்சி
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதிகள் சிவகாசி வந்தனர். இங்கு நாகலட்சுமி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தனர். திருமணம் முடிந்த நாலாவது நாளில் துணி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு வந்துள்ளனர் .
![கழிப்பறைக்குச் சென்ற புதுப்பெண் மாயம் - உறவினர்கள் அதிர்ச்சி Karur: new girl who went to the toilet is escape TNN கழிப்பறைக்குச் சென்ற புதுப்பெண் மாயம் - உறவினர்கள் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/18/905feecf385dc239829be1d5ba2950351676707267164183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருமணமான நாலு நான்கு நாளில் புதுப்பெண் மாயம்.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் விக்னே சுவரன் வயது 36. இருவரும் சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் சமீபத்தில் கரூர் வெண்ணமலை முருகன் கோயில் வைத்து திருமணம் நடந்தது .
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதிகள் சிவகாசி வந்தனர். இங்கு நாகலட்சுமி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தனர். திருமணம் முடிந்த நாலாவது நாளில் நாகலட்சுமியின் மகள் அஸ்வினி மற்றும் புதுப்பெண் தேவி ஆகியோர் பஸ் நிலையம் அருகில் உள்ள துணி கடைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு வந்துள்ளனர் .
கடைக்கு செல்வதற்கு முன்னர் புதுப் பெண் தேவி கழிப்பறை சென்று விட்டு வருவதற்காக கூறிவிட்டு சென்றவர் பின்னர் துணிக்கடைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி தனது தாய் நாகலட்சுமி மற்றும் புது மாப்பிள்ளை விக்னேசுவரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அவர்கள் பஸ் நிலையம் வந்து புது பொண்ணை தேடினர் .
ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்தனர் அந்த புகாரின் பேரி ல் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மாயமான புதுப்பொண்ணை தேடி வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)