மேலும் அறிய

Crime: குளித்தலை அருகே மாயமான சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு - திமுக கவுன்சிலர் கைது

குளித்தலை காவல்துறையினர் இந்த வழக்கை தற்கொலையாக மாற்றி பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினர்.

குளித்தலை அருகே சவாரிமேட்டில் மாயமான 16 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். புதற்கொலைக்கு தூண்டியதாக  திமுக பேரூராட்சி கவுன்சிலர்  மற்றும் அவரது மகன் உட்பட 3 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான கலைவாணி வயது 45.  இவரது மகள் தேவிகா 16.

இவரும் அதே ஊரை சேர்ந்த நங்கவரம் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் (திமுக) குணசேகரன் மகன் கஜேந்திரனும் (வயது 18) இருவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு கஜேந்திரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மே 24 ஆம் தேதி சிறுமி தேவிகாவுக்கு கஜேந்திரன் போன் செய்து பார்க்க வேண்டும் என்று கூறியதின்பேரில் தேவிகா, தேவிகாவின் அக்கா இருவரும் கஜேந்திரனிடம் தனியாக பேச சென்றுள்ளனர்.

அப்போது கஜேந்திரனின் உறவினர்கள் சிறுமி தேவிகாவை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தேவிகாவின் அக்கா தப்பித்து தனது உறவினர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.


Crime: குளித்தலை  அருகே  மாயமான சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு - திமுக கவுன்சிலர் கைது

 

தொடர்ந்து தேவிகாவின் உறவினர்கள் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டபோது தேவிகா இங்கு வரவில்லை தங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்து விட்டனர். இந்நிலையில் தேவிகாவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மறுநாள் 25ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என  தேவிகாவின் தாயார் கலைவாணி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குளித்தலை காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் மறுநாள் 26 ஆம் தேதி காலை 7 மணி அளவில் சவாரி மேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி சடலமாக மிதந்துள்ளார். குளித்தலை காவல்துறையினர், முசிறி தீயணைப்புத் துறையினர் இணைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவிகாவின் உறவினர்கள் பிரேதத்தை வாங்க மறுத்து சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Crime: குளித்தலை  அருகே  மாயமான சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு - திமுக கவுன்சிலர் கைது
அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால் தான் சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். மேலும் சிறுமியின் பிரேத பரிசோதனையில் தற்கொலை என்று மருத்துவர் கூறியுள்ளார். அவரை கொலை செய்து தான் கிணற்றில் வீசியுள்ளனர். எனவே மற்றொரு மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்டதாக கூறினால் அவரின் தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குளித்தலை காவல்துறையினர் திமுக பேரூராட்சி கவுன்சிலர் குணசேகரன், காதலனின் மாமா முத்தையன், கஜேந்திரன் ஆகிய மூன்று பேர் மீது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், குளித்தலை காவல்துறையினர் இந்த வழக்கை தற்கொலையாக மாற்றி பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை அவர் திமுக கவுன்சிலர் என்பதால் கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget