மேலும் அறிய

“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

திருமணம் செய்து கொள்வதாக கூறி, நகை பணத்திற்காக பலரையும் ஏமாற்றிய கல்யாண ராணி  ரேணுகா கைது செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் நகை பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் பல்வேறு காதல் ராணிகள் பல்வேறு இளைஞர்களை ஏமாற்றி வரும் நிலையில் கரூரிலும் ஒரு கும்பல் இளைஞரை ஏமாற்றி நகை, பணத்தை சுருட்டியது அம்பலமாகியுள்ளது. நடந்த கதையை விரிவாக காணலாம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில், கோவை, ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த ரேணுகா (36) என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

திருமணத்தின் போது 6- பவுன் தாலிக்கொடி, ஒரு பவுன் தங்கத்தோடு, அரை பவுன் மோதிரம் மற்றும் ரூபாய் 4 லட்சம் செலவு செய்து ரேணுகாவை திருமணம் முடித்துள்ளார். இந்த திருமணத்திற்கு ரேணுகாவின் மற்றொரு அண்ணன், அவரது மனைவி, ரேணுகாவின் தங்கை என்று சொன்ன நந்தினி ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது.

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

 

அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவிற்கு வந்த அலைபேசியை எடுத்து ரமேஷ் எதேச்சையாக பேசும்போது, பழனிகுமார் என்பவர், ரேணுகா என நினைத்து, பணம் நகைகளை எடுத்து வருவதாக கூறி ஏன் எடுத்து வரவில்லை என கேள்வி எழுப்பினார். 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

 

மேலும், ரேணுகாவிற்கு மெய்யர் என்ற கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளதாகவும், பின்பு பழனிகுமாருடன் 3 வருடம் தொடர்பில் இருந்து விட்டு, பின்பு ராஜ், முபாரக் ஆகியோருடன் தொடர்பில் இருந்து, பின்பு கோவையில் இரண்டாவதாக லோகநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், சில நாட்களில் அவரது பணம், நகைகளை எடுத்து வந்து விட்டதாகவும், பின்பு அதே புரோக்கர்களை வைத்து, இந்த வழக்கின் புகார்தாரர் ரமேஷை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரங்களை தனது மொபைல் போன் மூலம் ரமேஷ் படம் பிடித்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா டிசம்பர் 15-ஆம் தேதி திருமணத்தின்போது ரேணுகாவுக்கு போட்ட நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி உள்ளார்.

 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

இது தொடர்பாக ரேணுகாவின் ஏமாற்று வளையத்தில் உள்ள ஜெகநாதன் என்பவர் அலைபேசியில் ரமேஷை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் பணமும், 20 பவுன் நகையும் கொடுத்து விட்டால் பிரச்சனை ஏதும் செய்யாமல் விலகிக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் உன்னை வேறு திருமணம் செய்ய விடமாட்டேன் என்று தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ரமேஷ் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரேணுகாவை  அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, நகை பணத்திற்காக பலரையும் ஏமாற்றிய கல்யாண ராணி  ரேணுகா கைது செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்?  இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்? இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்?  இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்? இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
Embed widget