மேலும் அறிய

“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

திருமணம் செய்து கொள்வதாக கூறி, நகை பணத்திற்காக பலரையும் ஏமாற்றிய கல்யாண ராணி  ரேணுகா கைது செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் நகை பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் பல்வேறு காதல் ராணிகள் பல்வேறு இளைஞர்களை ஏமாற்றி வரும் நிலையில் கரூரிலும் ஒரு கும்பல் இளைஞரை ஏமாற்றி நகை, பணத்தை சுருட்டியது அம்பலமாகியுள்ளது. நடந்த கதையை விரிவாக காணலாம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில், கோவை, ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த ரேணுகா (36) என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

திருமணத்தின் போது 6- பவுன் தாலிக்கொடி, ஒரு பவுன் தங்கத்தோடு, அரை பவுன் மோதிரம் மற்றும் ரூபாய் 4 லட்சம் செலவு செய்து ரேணுகாவை திருமணம் முடித்துள்ளார். இந்த திருமணத்திற்கு ரேணுகாவின் மற்றொரு அண்ணன், அவரது மனைவி, ரேணுகாவின் தங்கை என்று சொன்ன நந்தினி ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது.

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

 

அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவிற்கு வந்த அலைபேசியை எடுத்து ரமேஷ் எதேச்சையாக பேசும்போது, பழனிகுமார் என்பவர், ரேணுகா என நினைத்து, பணம் நகைகளை எடுத்து வருவதாக கூறி ஏன் எடுத்து வரவில்லை என கேள்வி எழுப்பினார். 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

 

மேலும், ரேணுகாவிற்கு மெய்யர் என்ற கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளதாகவும், பின்பு பழனிகுமாருடன் 3 வருடம் தொடர்பில் இருந்து விட்டு, பின்பு ராஜ், முபாரக் ஆகியோருடன் தொடர்பில் இருந்து, பின்பு கோவையில் இரண்டாவதாக லோகநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், சில நாட்களில் அவரது பணம், நகைகளை எடுத்து வந்து விட்டதாகவும், பின்பு அதே புரோக்கர்களை வைத்து, இந்த வழக்கின் புகார்தாரர் ரமேஷை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரங்களை தனது மொபைல் போன் மூலம் ரமேஷ் படம் பிடித்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா டிசம்பர் 15-ஆம் தேதி திருமணத்தின்போது ரேணுகாவுக்கு போட்ட நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி உள்ளார்.

 

 


“ஒன்றா இரண்டா காதல் ஆசைகள்”.... பலரை ஏமாற்றி கைதான கல்யாணி ராணி

இது தொடர்பாக ரேணுகாவின் ஏமாற்று வளையத்தில் உள்ள ஜெகநாதன் என்பவர் அலைபேசியில் ரமேஷை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் பணமும், 20 பவுன் நகையும் கொடுத்து விட்டால் பிரச்சனை ஏதும் செய்யாமல் விலகிக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் உன்னை வேறு திருமணம் செய்ய விடமாட்டேன் என்று தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ரமேஷ் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரேணுகாவை  அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, நகை பணத்திற்காக பலரையும் ஏமாற்றிய கல்யாண ராணி  ரேணுகா கைது செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget