மேலும் அறிய

கன்னியாகுமரி: இரணியல் அருகே ஆலய திருவிழாவில் கட்டப்பட்டிருந்த பொருட்களை அடித்து உடைத்த 3 பேர் கைது

திருவிழாவில் கட்டப்பட்ட மின்விளக்குகள், ஒலிபெருக்கி, சிசிடிவி கேமரா ஆகியவை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காட்டில் வரலாற்று சிறப்புமிக்க பழமையான புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்திற்கு பிறகு கட்டப்பட்ட முதன்மையான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வர். இந்த ஆண்டு  246-வது ஆண்டு திருவிழா கடந்த 14-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி வழக்கம் போல காரங்காட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் மேற்கு தெருவில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி மற்றும் மின் விளக்குகளை கடந்த 15ம் தேதி இரவு சமூக விரோத கும்பல் ஒன்று தீ வைத்து எரித்து இருந்தது. இது சம்பந்தமான புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு திருவிழா திருப்பலி முடிந்து புனிதரின் திருத்தேர் பவனி நடந்தது.‌ இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அதிகாலை நேரத்தில் திடீரென காரங்காடு மேற்கு தெருவில் கட்டப்பட்டு இருந்த மின் விளக்குகள் அனைத்தும் அணைந்துள்ளன. என்னவென்று பார்த்தபோது முகமூடி அணிந்த சமூக விரோத கும்பல் மேற்குதெரு பகுதியில் உள்ள ஒலிபெருக்கி, மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்து இருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் அடித்து உடைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி, மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கௌதம், தடய அறிவியல் ஆய்வக அதிகாரி மினிட்டா, தனிப்படை சப். இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.‌ 

தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் பதிவு உள்ளிட்டவைகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த  சம்பவத்தில் ஈடுபட்டது மொட்டவிளையை சேர்ந்த தங்கவேல் மகன் தனம் (32), ரங்கசாமி மகன் கோபிகுமார் (37), ராஜேந்திரன் மகன் மகேஷ் (22) என தெரிய வந்தது.  இதை அடுத்து தீவிர தேடுதலில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும்  நேற்று கைது செய்தனர். இதில் தனம் என்பவருக்கு முதல் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் கட்டப்பட்ட மின்விளக்குகள், ஒலிபெருக்கி, சிசிடிவி கேமரா ஆகியவை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget