மேலும் அறிய

காஞ்சிபுரம்: அவளூர் கிராமத்தில் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; 7 பேர் கைது

அவளூர் கிராமத்தில் 2 இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், இரு தரப்பும் மாறி மாறி போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது "

காஞ்சிபுரம் அவளூர் கிராமத்தில் 2 இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், இரு தரப்பும் மாறி மாறி போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அவளூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஆசூர் பகுதியை சேர்ந்த விஷால் (19), சுந்தர் (21) ஆகிய இரண்டு இளைஞர்கள். அவளூர் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும், மாணவி ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். கேலியும் கிண்டலமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், அப்பகுதி பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
 
பெண்களுடன் இளைஞர்கள் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து, சுந்தர் மற்றும் விஷாலை மடக்கி பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வேலி காத்தான் கட்டையால், இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த சம்பவத்தின் போது, அவளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதை மொபைல்போனில், வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவு செய்துள்ளார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் விஷால், சுந்தர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விசிகவினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், இளைஞர்களை ஊர் கிராம மக்கள் காலில் விழ வைத்துள்ளதாக, விசிக மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புக்கு முன்னணி சார்பில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
 
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
 
இதனைத்தொடர்ந்து, அவளூர் கிராமத்தை சேர்ந்த 7 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த மாகறல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் போலீசார் கைது செய்து அழைத்து, சென்றிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து, அவளூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பாமகவினர் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை, போலீசார் சமாதானம் படுத்தினர். இந்தநிலையில் விசிக சார்பில், இன்று காலை வாலாஜாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget