மேலும் அறிய

தஞ்சையில் 5 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

’’பெங்களூர் மாநிலத்தில் வேலை செய்யும் போது, ஒரு பெண்ணையும், மதுரையில் வேலை செய்யும் ஒரு பெண்ணையும், கும்பகோணம் மற்றும் மற்றொரு ஊர்களில் தலா 3 பெண்கள் என 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்’’

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, நாச்சியார்கோயிலை அடுத்த வண்டுவாஞ்சேரியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் கும்பகோணம் பஸ் நிலையம் அருகிலுள்ள மல்டி மார்க்கெட்டிங் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் அச்சிறுமி காணாமல் போனதால், சிறுமியின் பெற்றோர்கள், நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். சிறுமி காணாமல்போனதை அடுத்து, போலீசார், அக்கடைக்கு சென்று விசாரித்த போது, கடையில் வேலை பார்த்து வந்த மதுரை, மேலவீதி, சிங்காரபுரம், மெகபூபாளையத்தை சேர்ந்தவர் சர்பூதீன் மகன் சையத்அலி(40) என்பவரும் காணாமல் போனது தெரிய வந்தது.

போலீசார் விசாரணையில், கடைக்கு வந்த சிறுமியை, சையத்அலி,பைக்கில் அழைத்து சென்றதாக தெரிய வந்தது. தொடர்ந்து அச்சிறுமியின் வீட்டில் விசாரணை செய்த போது, சிறுமி, சிம் கார்டை மட்டும் செல் போனிலிருந்து எடுத்து கொண்டு, செல்போனை வீட்டில் வைத்து சென்றது தெரியவந்தது. பின்னர், போலீசார், சையத் அலியின் செல்போனை கண்காணித்த போது, திருப்பூரில் ஸ்விட்ச் ஆஃப் செய்தது தெரிய வந்தது.  போலீசார் திருப்பூருக்கு சென்று விசாரித்த போது, சையத்அலி, செல்போனை அங்குள்ள செல்போன் கடையில், தான் கோயம்புத்துாரிலிருந்து வருவதாகவும், பஸ்சுக்கு பணம் இல்லாததால், செல்போனை விற்பனை செய்வதாக கூறி, விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.

இதனிடையில் கடந்த 5 மாதகாலமாக தேடி வந்த நிலையில், சையத்அலி, வங்கி மற்றும், ஏடிஎம் மூலம் பணம் எடுத்து பரிவர்த்தனை செய்து வந்தது, போலீசாருக்கு தெரிய வந்தது. பின்னர், ரகசியமாக விசாரணை செய்த போது, கேரளா மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார், கேரளா மாநிலத்திற்கு அவர்கள் இருவரையும் பிடிக்க சென்ற போது, சையத்அலி, போலீசார் வருவதையறிந்து, கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோயிலுக்கு வந்தார்,

இதனையறிந்த போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சையத்அலியை பிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், போலீசார் விசாரணையில், சையத்அலி, பெங்களூர் மாநிலத்தில் வேலை செய்யும் போது, ஒரு பெண்ணையும், மதுரையில் வேலை செய்யும் ஒரு பெண்ணையும், கும்பகோணம் மற்றும் மற்றொரு ஊர்களில் தலா 3 பெண்கள் என 5 பெண்ணை திருமணம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சையத்அலி 5 இளம் பெண் மற்றும் சிறுமியை திருமணம் செய்து கொண்டது நகை பணத்திற்காகவும் அல்லது வேறு காரணமாக இருக்குமா என போலீசார், சையத்அலியை பற்றி  தீவிர  விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சையத்அலியிடமிருந்து, மீட்கப்பட்ட சிறுமியை, அறிவுரைகள் கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget