![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : 14 வயது பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. பதைபதைக்கும் நிலையில் மீட்கப்பட்ட உடல்..
தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டதாக சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அர்மான் அன்சாரி என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
![Crime : 14 வயது பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. பதைபதைக்கும் நிலையில் மீட்கப்பட்ட உடல்.. Jharkhand Tribal girl raped dead body found hanging from tree in Dumka Crime : 14 வயது பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. பதைபதைக்கும் நிலையில் மீட்கப்பட்ட உடல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/04/bec7cb13d2aae802a395c7b243478b261662267446703109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், 14 வயது பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடுத்து, அந்த சிறுமியின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு
கடந்த வெள்ளிக்கிழமை முஃபாசில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டதாக சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அர்மான் அன்சாரி என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு கட்டிட தொழிலாளியாக பணிபுரிகிறார் என்று போலீஸ் சூப்பிரண்டு அம்பர் லக்ரா பிடிஐயிடம் தெரிவித்தார். அவர் மீது IPC பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 302 (கொலை) மற்றும் SC/ST சட்டம் மற்றும் POCSO சட்ட விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது என லக்ரா மேலும் தகவல் தெரிவித்தார்.
முதல்வர் கருத்து
இந்த சம்பவம் குறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வேதனை தெரிவித்துள்ளார். அவருடைய டீவீட்டில், "தும்காவில் நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தும்கா காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களின் ஆன்மாவுக்கு கடவுள் அமைதியையும் வலிமையையும் தரட்டும். இந்த இக்கட்டான நேரத்தை இழந்து தவிக்கும் குடும்பம்," என்று சோரன் ட்வீட் செய்துள்ளார்.
பாஜக கருத்து
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வரும் ஆன, பாபுலால் மராண்டி தனது ட்விட்டர் பதிவில், குற்றவாளிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறுமி தூக்கிலிடப்பட்டதாகக் கூறினார். அவர் செய்துள்ள ட்வீட்டில், "நீங்கள் யாரைக் காப்பாற்றுகிறீர்கள்? வெட்கப்பட வேண்டும்! நீங்களும் உங்கள் காவல்துறையும் எதை மறைத்தாலும் இறந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" ,என்று கூறி இருந்தார். ஹேமந்த் சோரனைத் தாக்கி, பாஜக தேசியத் துணைத் தலைவரும், மற்றொரு முன்னாள் முதல்வருமான ரகுபர் தாஸ், ட்விட்டர் பதிவில், "ரிசார்ட் அரசியலில் இருந்து நேரம் கிடைக்கும்போது ஜார்கண்டில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்", என்றார்.
ஜார்கண்டில் பரபரப்பு நிலை
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏவாக தொடர்வதில் குழப்பம் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரின் தலைநகரான ராய்பூரில் உள்ள ரிசார்ட்டுக்கு ஆளும் யுபிஏ கூட்டணியின் 32 எம்எல்ஏக்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியின சிறுமியின் மரணம் குறித்து ஜேஎம்எம் கட்சி தனது எதிர்வினையை ஞாயிற்றுக்கிழமை வெளியிடும் என்று ஜேஎம்எம் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா பட்டாச்சார்யா தெரிவித்தார். ஆகஸ்ட் 23 அன்று நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஷாருக் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபர், 16 வயது சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவளது அறையின் ஜன்னலுக்கு வெளியே இருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண், இந்த நிலைக்கு ஆளானார். இந்த செய்தி வெளிவந்ததோடு தற்போது, ராஞ்சியில் 15 வயது பழங்குடியின சிறுமியை 26 வயது இளைஞன் தனது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த செய்தியும் வெளியாகி மாநிலத்தை பரபரப்பாக்கி உள்ளது. இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)