மேலும் அறிய

மீண்டும் ஒரு அதிர்ச்சி! ஜார்க்கண்டில் இளம்பெண்ணுக்கு காரில் நடந்த கொடூரம்! சக கலைஞர்களே இப்படியா?

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான நடன மேடை கலைஞர் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அவரது சக நடிகர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடு மறைவதற்குள், அடுத்ததாக 21 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நாட்டையே உலுக்கியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான நடன மேடை கலைஞர் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அவரது சக நடிகர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

பாலமுவை சேர்ந்த மூன்று இணை நடிகர்கள், 21 வயதான நடன மேடை கலைஞருக்கு போதைப்பொருள் கொடுத்து காரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஷ்ராம்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ராகேஷ் சிங் தெரிவிக்கையில், “ இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது குற்றவாளியை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 

குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரே இசைக்குழுவில் இணைந்து பணியாற்றியதால் அறிமுகமானவர்கள் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பாலமுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். 

மேலும் அவர், “ சத்தீஸ்கரில் இருந்து பலாமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த நடன பெண் கலைஞர் வந்துள்ளார். சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் நடத்த முடியாமல் போயுள்ளது. இதையடுத்து, அந்த பெண் தனது சக ஆண் நடிகர்களுடன் ஹூசைனாபாத்தில் மற்றொரு விழாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஹூசைனாபாத் செல்லும் வழியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பெண்ணுக்கு சில போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர்” என்று தெரிவித்தார். 

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள விஷ்ராம்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாலையில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தபின், மயக்க நிலையில் சாலையின் ஓரத்தில் விட்டுவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னர் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தும்கா மாவட்டத்தில் தனது கணவருடன் முகாமில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Poco M8 5G Review: சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
Embed widget