மேலும் அறிய

மீண்டும் ஒரு அதிர்ச்சி! ஜார்க்கண்டில் இளம்பெண்ணுக்கு காரில் நடந்த கொடூரம்! சக கலைஞர்களே இப்படியா?

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான நடன மேடை கலைஞர் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அவரது சக நடிகர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடு மறைவதற்குள், அடுத்ததாக 21 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நாட்டையே உலுக்கியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான நடன மேடை கலைஞர் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அவரது சக நடிகர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

பாலமுவை சேர்ந்த மூன்று இணை நடிகர்கள், 21 வயதான நடன மேடை கலைஞருக்கு போதைப்பொருள் கொடுத்து காரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஷ்ராம்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ராகேஷ் சிங் தெரிவிக்கையில், “ இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது குற்றவாளியை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 

குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரே இசைக்குழுவில் இணைந்து பணியாற்றியதால் அறிமுகமானவர்கள் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பாலமுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். 

மேலும் அவர், “ சத்தீஸ்கரில் இருந்து பலாமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த நடன பெண் கலைஞர் வந்துள்ளார். சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் நடத்த முடியாமல் போயுள்ளது. இதையடுத்து, அந்த பெண் தனது சக ஆண் நடிகர்களுடன் ஹூசைனாபாத்தில் மற்றொரு விழாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஹூசைனாபாத் செல்லும் வழியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பெண்ணுக்கு சில போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர்” என்று தெரிவித்தார். 

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள விஷ்ராம்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாலையில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தபின், மயக்க நிலையில் சாலையின் ஓரத்தில் விட்டுவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னர் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தும்கா மாவட்டத்தில் தனது கணவருடன் முகாமில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget